Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நகரப்பகுதியில் பாலித்தீன் பயன்படுத்தினால் அபராதம்! சுற்றுச்சூழலை காக்க அதிகாரிகள் வலியுறுத்தல்

Print PDF

தினமலர்            27.12.2013 

நகரப்பகுதியில் பாலித்தீன் பயன்படுத்தினால் அபராதம்! சுற்றுச்சூழலை காக்க அதிகாரிகள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி:"பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 40 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும்,' என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சியில், 40 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பாலித்தீன் பொருட்களை பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், அவற்றை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நகராட்சி மூலம் தெரிவிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டும் வருகின்றனர்.

ஆனால், பாலித்தீன் பொருட்கள் பயன்பாடு குறைந்தபாடில்லை. கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குபவர்கள் பொருட்களை எடுத்துச் செல்ல பாலித்தீன் பொருட்களை பயன்படுத்தி வருவதும் தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில், நகராட்சி சுகாதார அதிகாரிகள் நேரடியாக உணவகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்களுக்கு சென்று, 40 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், கடைகளுக்கு முன், நகராட்சி மூலம் வழங்கப்பட்ட அறிவிப்பு நோட்டீசும் ஒட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண் வளத்தை பாதிக்கும் பாலித்தீனை தடையை மீறி பயன்படுத்தினால், அபராதம் வதிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நகராட்சி பகுதியில், 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பொருட்கள் மற்றும் தட்டுகள், டம்ளர்கள், மேஜை விரிப்புகள் ஆகியவை பயன்படுத்துதல் கூடாது என சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் விதிகளின் படி, தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை பயன்படுத்தப்படும் பாலித்தீன் பொருட்களால், உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதுடன், நிலத்தடி நீர் மற்றும் மண்வளம் பாதிப்படைகிறது. பாலித்தீன் கேரி பேக்குகளில், குப்பைகளை போட்டு கழிவுநீர் கால்வாயில் போடுவதால், கழிவு நீர் தேக்கமடைந்து கொசு புழு உற்பத்தியாகி, மலேரியா, டெங்கு, யானைக்கால் போன்ற கொடிநோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகின்றது.

பாலித்தீன் பைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவு பண்டங்களை ஆடு, மாடு போன்ற விலங்குகள் உண்பதால், ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு, விலங்குகள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பாலித்தீன் பொருட்களை எரிப்பதால், ஏற்படும் புகையினை பொதுமக்கள் சுவாசிப்பதால், புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பாலித்தீன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலித்தீன் கழிவு (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதி 2011ன் விதி 5(சி) ன் அடிப்படையில், கொண்டு வரப்பட்ட உப விதிகளின் படி, பாலித்தீன் பயன்பாட்டிற்கு அபராதத்தொகை வசூலிக்கப்படும். பொதுமக்களுக்கு ஒரு பயன்பாட்டிற்கு -ரூ100ம், சிறுவண்டி வியாபாரிகள், சிறுவியாபாரிகளுக்கு ஒரு பயன்பாட்டிற்கு 100 ரூபாயும்; பெரிய வணிக வியாபாரிகள் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படும். சில்லரை வியாபாரிகள் ஆய்வின் போது, முதல் முறை பயன்பாடு என்றால், ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பயன்பாட்டிற்கு ரூ.5 ஆயிரமும் வசூலிக்கப்படும்.

மொத்த வியாபாரிகள் முதல்முறை பிடித்தால், 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் முறை பயன்படுத்தினால், 10 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும். பாலித்தீன் கழிவுகளை எரித்தால், 1000 ரூபாயும் வசூலிக்கப்படும். எனவே, பாலித்தீன் பொருட்களை பயன்படுத்தாமல், சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

 

கோவையில் 4 மாடி கட்டடம் இடிப்பு

Print PDF

தினமலர்            27.12.2013 

கோவையில் 4 மாடி கட்டடம் இடிப்பு

கோவை:கோவையில், நான்கு பெண்களை பலிவாங்கிய, நான்கு மாடி வணிக வளாகத்தில், இரு தளங்களை இடிக்கும் பணி நேற்று துவங்கியது.

கோவை அவிநாசி ரோடு, லட்சுமி மில்ஸ் சிக்னல் அருகில், "விக்னேஷ்வரா கிரிஸ்டா' என்ற வணிக கட்டடத்தில், கடந்த ஏப்.,25ல் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் நான்கு பெண்கள், உடல்கருகி உயிரிழந்தனர். இந்த வணிக வளாகம் கோவை, ரெட்பீல்ட்ஸ், நாராயணசாமி வீதியை சேர்ந்த, ஜெயலட்சுமி, அவரது மகன் ரமேஷ் ஆதித்யா ஆகியோருக்கு சொந்தமானது. விபத்துக்குப்பின் இந்த வணிக வளாகம், அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்டு, "சீல்' வைக்கப்பட்டது. விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

கடந்த 1999, டிச., 22ல், பேஸ்மென்ட் 420.24 ச.மீட்டர், தரை தளம் 423.8 ச.மீட்டர், முதல்தளம் 468.3 ச.மீட்டர், மேல்தளத்தில் 47 ச.மீட்டரில் ஒரு அறை கட்ட உள்ளூர் திட்டக்குழுமத்திடம் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், அனுமதியின்றி இரண்டாம், மூன்றாம் தளம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அனுமதியின்றி கூடுதல் பரப்பில் கட்டடம் கட்டியதற்காக, உள்ளூர் திட்டக்குழுமம் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. கட்டடத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாதது தொடர்பாக ஆர்.டி.ஓ., விசாரணை நடந்தது.

இதற்கிடையே, அனுமதியற்ற கட்டுமானத்தை இடிக்க, உள்ளூர் திட்டக்குழுமம் வழங்கிய 30 நாள் அவகாசம் நிறைவடைந்ததால், இரண்டாம், மூன்றாம் தளத்தை இடிக்க, கடந்த மே 31ல், அப்போதைய கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார். இதற்கான பணிகளும் துவங்கின. எனினும், கட்டட உரிமையாளர் சென்னை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார்; இடிக்கும் பணி கைவிடப்பட்டது.

இந்நிலையில், அனுமதியற்ற கட்டட பரப்பை இடிக்கக்கூடாது என, முன்பு பிறப்பித்த தடை உத்தரவை, சென்னை ஐகோர்ட் விலக்கிக்கொண்டது.

மேலும், "அனுமதியற்ற கட்டட விவகாரத்தில் தலையிட முடியாது. விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கலாம் என, ஐகோர்ட் கடந்த நவ., 19ல் உத்தரவிட்டது.

இதையடுத்து, உள்ளூர் திட்டக் குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், அனுமதியற்ற கட்டட பரப்பை இடிக்க, கடந்த, 24ம் தேதி உத்தரவிட்டார் உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் (பொறுப்பு) சந்திரசேகரன், உதவி இயக்குனர் யோகராஜ், மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் விமலா தலைமையில், வணிக வளாக கட்டடத்தில், இரண்டு தளங்களை இடிக்கும் பணி, நேற்று காலை 7:30 மணிக்கு துவங்கியது.

உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் சந்திரசேகரன் கூறுகையில், ""அனுமதியற்ற இரண்டு தளங்கள் முழுமையாக இடிக்கப்படும். கான்கிரீட் பில்லர்களை இடிக்க, பவர் கட்டிங் மெஷின் வேண்டும். கோவையில், நவீன இயந்திரங்கள் இல்லாததால், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் பேசியுள்ளோம்.

பவர் கட்டிங் மிஷின் வருவதற்குள், தளங்கள் இடிக்கும் பணி நிறைவு பெறும். அதன்பின், கான்கிரீட் பில்லர்கள் வெட்டி அகற்றப்படும். உள்ளூர் திட்டக்குழும கட்டட அனுமதியின்படி, மற்ற தளங்கள், சுற்றுப்புற திறவிடங்கள் அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

மாநகராட்சி மருத்துவமனைகளில் 20 பணியிடங்களை நிரப்ப 2 ஆண்டுகளாக முயற்சி

Print PDF

தினமலர்            27.12.2013 

மாநகராட்சி மருத்துவமனைகளில் 20 பணியிடங்களை நிரப்ப 2 ஆண்டுகளாக முயற்சி

சென்னை:மாநகராட்சி மருத்துவமனைகளில் பணிபுரிய மருத்துவர்களிடம் ஆர்வம் இல்லாததால், காலியாக உள்ள 20 பணியிடங்களை நிரப்ப முடியாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநகராட்சி முயற்சி.

62/82


திருவொற்றியூர், மணலி, மாதவரம், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களை தவிர, மற்ற மண்டலங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மாநகராட்சி சார்பில், 82 இடங்களில் நடத்தப்படும் இவற்றில், தலா ஒரு மருத்துவர் மற்றும் ஒரு மருந்தாளுனர் இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது, 20 இடங்களில் மருத்துவர்களும், 12 இடங்களில் மருந்தாளுனர்களும் இல்லை. இவற்றில் முக்கிய குடிசை பகுதிகளில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன.

இந்த பற்றாக்குறையால், ஒரே மருத்துவர் இரு இடங்களில் பணியாற்ற வேண்டி இருப்பதோடு, சில இடங்களில், மருந்தாளுனர்களே மருத்துவர்கள் போல் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டிய சூழலும் உள்ளது.

ஒப்பந்த முறை

காலி பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. ஆனால், 'தனியார் மருத்துவமனைகளில் அதிக சம்பளம் கிடைப்பதால் மாநகராட்சியில் பணிபுரிய மருத்துவர்களிடையே ஆர்வம் இல்லை' என, மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால், மருத்துவர் தேர்வுக்காக பல முறை நேர்காணல் நடத்தப்பட்டும் பலனில்லை. சமீபத்தில் 20 மருத்துவர் பணியிடங்களுக்காக நடந்த நேர்முக தேர்வுக்கு, 80 பேருக்கு மாநகராட்சி அழைப்பு அனுப்பியது. 12 பேர் மட்டுமே நேர்முக தேர்வுக்கு வந்தனர். இவர்களின் பணி நியமனமும் இன்னும் உறுதி செய்யப் படவில்லை.

இதனால், வேறு வழியில்லாமல், ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்கவும், குடிசை பகுதிகளில் 'கிளினிக்' நடத்தி வரும் தனியார் மருத்துவர்களை, மாலை நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்ற நியமனம் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது.

 


Page 240 of 3988