Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

திருச்சி மாநகரில் 4 பூங்கா சீரமைப்பு மேயர் ஆய்வு

Print PDF

தினகரன்           20.12.2013

திருச்சி மாநகரில் 4 பூங்கா சீரமைப்பு மேயர் ஆய்வு

திருச்சி, : திருச்சி மாநகராட்சியில் இ.பி. ரோட்டில் உள்ள லூர்துசாமி பூங்கா, கள்ளத்தெருவில் உள்ள திரவியம் பிள்ளை பூங்கா, பீரங்கி குளத்தெருவில் உள்ள டாக்டர் வீ.கே. ரங்கநாதன் பூங்கா, மேலப்புலிவார்டு சாலையில் அமைந்துள்ள இப்ராகிம் பூங்கா ஆகியவை புனரமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இருந்த பழுதான விளையாட்டு சாதனங்கள் மாற்றப்பட்டும், சேதமடைந்திருந்த பகுதிகள் செப்பனிடப்பட்டும் வருகின்றன. இந்த பணிகளை மேயர் ஜெயா நேற்று ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  விடுமாறு அறிவுறுத்தினார். மேலும் மைதானமாக உள்ள ரங்கநாதன் பூங்காவின் ஒரு பகுதியில் உடற்பயிற்சி நிலையம் அமைக்கவும் உத்தரவிட்டார்.ஆய்வின்போது நகர பொறியாளர் சந்திரன், செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி ஆணையர் ரங்கராஜன், கவுன்சிலர்கள் சுதாகர், லாவண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

விதி மீறி கட்டிய கட்டிடத்திற்கு சீல் மாநகராட்சி அதிரடி

Print PDF

தினகரன்           20.12.2013

விதி மீறி கட்டிய கட்டிடத்திற்கு சீல் மாநகராட்சி அதிரடி

மதுரை, :  மதுரையில் தரைத் தளத்திற்கு அனுமதி வாங்கி, அடுக்கு மாடி வீடு கட்டியதால் கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் கட்டிடம் கட்ட தரைதளத்தில் கூரை மாற்றம் செய்ய பாலன் மற்றும் திருமலை செல்வி பெயரில் வரைபட அனுமதியை மாநகராட்சி வழங்கியது. 

இந்த இடத்தில் கூரைமாற்றம் செய்ய கட்டிட அனுமதி பெற்ற வரைபடத்திற்கு மாறாக முதல் தளம் மற்றும் 2ம் தளம் கட்டிடம் கட்டப்பட்டது. இதனை அதிகாரிகள் ஆய்வின் போது கண்டுபிடித்தனர். இதற்காக கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் அதன் பின்னரும் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இதையடுத்து இந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க ஆணையாளர் கிரண்குராலா உத்தரவிட்டார்.

நேற்று மாநகராட்சி செயற்பொறியாளர் ராக்கப்பன், உதவி ஆணையாளர் தேவதாஸ், உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி, உதவி பொறியாளர் ஜெயா ஆகியோர் அங்கு சென்று கட்டுமான பணிகளை நிறுத்தினர். பணியாளர்களை வெளியேற்றி விட்டு கட்டிடத்தை பூட்டி சீல் வைத்தனர்.

 

கடலூரில் குழாய் உடைப்புதேவனாம்பட்டினத்திற்கு குடிநீர் "கட்'

Print PDF

தினமலர்             20.12.2013

கடலூரில் குழாய் உடைப்புதேவனாம்பட்டினத்திற்கு குடிநீர் "கட்'

கடலூர் :கடலூர் பாரதி சாலையில், உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை நகராட்சி ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடலூர், திருவந்திபுரம் மலையில் இருந்து நகரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடலூர் புதுநகர் போலீஸ் நிலையம் எதிரே, பாரதி சாலையில் நகரப் பகுதிக்கு செல்லும் மெயின் குடிநீர் குழாயில் நேற்று, திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடியது.இதையறிந்த நகராட்சி ஊழியர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று, ஐந்தரை அடி ஆழம் பள்ளம் தோண்டி உடைப்பு ஏற்பட்ட பைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.பைப் உடைப்பு ஏற்பட்டதால், அண்ணா நகர், கே.கே.நகர், நேரு நகர், பத்மாவதி நகர், தேவனாம்பட்டினம், சுனாமி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று 20ம் தேதி காலை குடிநீர் விநியோகம் செய்ய இயலாது.நாளை (21ம் தேதி) காலை வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

 


Page 244 of 3988