Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அரசு மருத்துவமனையில் விரைவில் அம்மா உணவகம்

Print PDF

தினகரன்             19.12.2013

அரசு மருத்துவமனையில் விரைவில் அம்மா உணவகம்

மதுரை, : மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. நேற்று கலெக்டர், மேயர், கமிஷனர், டீன் மற்றும் அதிகாரிகள் இந்த உணவக கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு எதிரே அம்மா உணவக கட்டிடம் கட்டி தயார் நிலையில் உள்ளது. விரைவில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறக்க உள்ளார். இதனை கலெக்டர் சுப்ரமணியன், மேயர் ராஜன்செல்லப்பா, டீன் மோகன், நிலைய மருத்துவ அதிகாரி பிரகதீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். சமையலறை, உணவு பரிமாறும் இடம், தண்ணீர் உள்பட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

நோயாளிகள் கூறுகையில், மதுரை அரசு மருத்துவமனை க்கு அதிக எண்ணிக்கையில் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் வருகின்றனர். எனவே கூடுதல் நபர்களுக்கு உணவு விநியோகம் செய்ய வேண்டும். சலுகை விலையில் மூன்று வேளையும் உணவு, நோயாளிகளுக்காக பார்சல் என சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இத்துடன் சுத்திகரிக்கப்பட்ட சூடான குடிநீர், மொபைல் போன்களுக்கு மின்சார சார்ஜ் செய்யும் வசதிகள் இங்கு ஒரு பகுதியில் அமைக்க வேண்டும் என்றனர்.

 

நந்தம்பாக்கத்தில் மாநகராட்சி சார்பில்...மாட்டு தொழுவம் !மாடு வளர்ப்போர் கோரிக்கை ஏற்பு

Print PDF

தினமலர்              19.12.2013

நந்தம்பாக்கத்தில் மாநகராட்சி சார்பில்...மாட்டு தொழுவம் !மாடு வளர்ப்போர் கோரிக்கை ஏற்பு

ஆலந்தூர்: நந்தம்பாக்கத்தில் பகுதிவாசிகளுக்கு இடையூறின்றி மாடு வளர்க்க வசதியாக, பொது தொழுவம் அமைத்துத் தருவதாக மாநகராட்சி உறுதியளித்து உள்ளது.அதே நேரத்தில், கால்நடை வளர்ப்போர், தங்கள் மாடுகள் தெருவில் சுற்றித்திரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என, எச்சரித்து உள்ளது.

புகார்நந்தம்பாக்கம், மேற்கு மாடவீதியில் வசித்து வரும் 25 குடும்?பத்தினர், ஏறத்தாழ 200 மாடுகளை வளர்த்து வருகின்றனர்.அந்த மாடுகள், தெருவில் சுற்றித்திரிவதால், பள்ளி செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதுடன், சுகாதாரமும் பாதிக்கப்படுவதாக அந்த பகுதிவாசிகள், மாநகராட்சிக்கு, புகார் அளித்தனர்.இதை தொடர்ந்து, ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில், நேற்று, ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், மாடு வளர்ப்போர், அந்த பகுதி காவல் ஆய்வாளர், வார்டு கவுன்சிலர், மண்டல குழு தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.'பாரம்பரிய தொழில்'கூட்டத்தில், மாடு வளர்ப்போர் பேசியதாவது:கடந்த, ஐந்து தலைமுறையாக, மேற்கு மாடவீதியில் மாடு வளர்த்து வருகிறோம்.

நாங்கள், 250க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பால் வழங்கி வருகிறோம். எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. பாக்கெட் பால் வருவதற்கு முன், எங்களை நம்பி தானே இருந்தீர்கள். தற்போது, எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்குவது எந்த விதத்தில் நியாயம்.மாடு வளர்க்கும் அனைவரும், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். மாட்டை விற்றுவிட்டு வேறு எங்கு செல்வது. அடுத்த தலைமுறை, இந்த தொழிலுக்கு வராது. அதுவரை, எங்கள் தலைமுறையை காப்பாற்ற உதவுங்கள். மாடுகள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அவற்றை அடித்து, விரட்டும் போது தான் பாய்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.பழைய தீர்மானம்கடந்த 1996ம் ஆண்டு நந்தம்பாக்கம் பேரூராட்சியாக இருந்த போது, பொது தொழுவம் அமைக்க ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், பின் அது கிடப்பில் போடப்பட்டதாகவும், மாடு வளர்ப்போர் தெரிவித்தனர்.அதன் அடிப்படையில் மாநகராட்சி தற்போது இடம் ஒதுக்கி, தொழுவம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.

பகராக மாட்டு சாணத்தை, எரிவாயு தயாரிப்பு உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக, மாநகராட்சிக்கு இலவசமாக வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.கருத்துக்கள் பதிவுஆலோசனை கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர், அண்ணாதுரை பேசியதாவது:காலி இடம் கிடைத்தவுடன், மாட்டு தொழுவம் கட்டி தரப்படும். அதுவரை, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மாடு வளர்க்க வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுப்போம். மாநகராட்சிக்கு இலவசமாக சாணம் கொடுப்பது குறித்து, உயர் அதிகாரிகளின்கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

 

ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Print PDF

தினத்தந்தி               19.12.2013

ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் கவுரவ தலைவர் கே.ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைவர் விஜயக்குமார், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொறியாளர் சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் அசோக்குமார், துணைத்தலைவர் சண்முகவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளன கோட்ட செயலாளர் கே.சாமிநாதன், தென்னக ரெயில்வே மஸ்தூர் சங்கத்தின் கோட்ட துணை செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு உதவி செயற்பொறியாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பொறியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பிரேம்குமார், துப்புரவு ஆய்வாளர் சங்க தலைவர் ஜாஹீர் எஸ்.ஹூசைன் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சுப்பணியாளர் சங்க துணைத்தலைவர் பி.வி.ஆறுமுகம் வரவேற்று பேசினார். முடிவில் துணைத்தலைவர் ப.மாரிமுத்து நன்றி கூறினார்.

 


Page 246 of 3988