Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

வாணிப்புத்தூர் பேரூராட்சியில் ரூ.60 லட்சம் செலவில் நலத்திட்ட பணிகள்

Print PDF

தினத்தந்தி            16.12.2013

வாணிப்புத்தூர் பேரூராட்சியில் ரூ.60 லட்சம் செலவில் நலத்திட்ட பணிகள்

கோபிசெட்டிபாளையம் அருகே வாணிப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கள்ளியங்காடு பகுதியில் தார்சாலை, பங்களாப்புதூரில் கான்கிரீட் சாலை, வாணிப்புத்தூரில் குடிநீர் வசதி, டி.என்.பாளையத்தில் சாக்கடை வசதி ஆகியவற்றிற்காக ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வாணிப்புத்தூர் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை தாங்கினார். விழாவில் அந்தியூர் எஸ்.எஸ்.ரமணீதரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் ரங்கநாதன், கவுன்சிலர்கள் ஹரிபாஸ்கர், அண்ணாத்துரை, வெள்ளியங்கிரிநாதன், முனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

ஈரோடு பகுதியில் ரூ.2½ கோடி மதிப்புள்ள விலையில்லா மிக்சி, கிரைண்டர்–மின்விசிறி

Print PDF

தினத்தந்தி            16.12.2013

ஈரோடு பகுதியில் ரூ.2½ கோடி மதிப்புள்ள விலையில்லா மிக்சி, கிரைண்டர்–மின்விசிறி

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஆர்.என்.புதூர் மற்றும் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் ரூ.2½ கோடி மதிப்புள்ள விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்.

விலையில்லா பொருட்கள்....

ஈரோடு மாநகராட்சியில் 2, 3 மற்றும் 5–வது வார்டுக்கு உள்பட்ட ஆர்.என்.புதூர் மற்றும் பி.பி.அக்ரஹாரம் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ரூ.83 கோடி

தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் பெண்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்து 333 பெண்களுக்கு ரூ.83 கோடியே 13 லட்சம் மதிப்பில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழக முதல்–அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் ஒரு கோடியே 83 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் மூலம் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்துக்குத்தான் முதல் கையெழுத்திட்டார்.

ஏழைக்குடும்பத்தில் பிறந்த பெண்கள் திருமண வயதை அடைந்தும் வறுமை மற்றும் ஏழ்மை காரணமாக திருமணம் ஆகாமல் உள்ள நிலையை அறிந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஏழை பெண்களுக்காக தாலிக்கு தங்கமும், திருமண நிதி உதவியும் வழங்கி வருகிறார்.

நேரடியாக சென்றடைகிறது

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 4 செட் சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், வண்ணப்பென்சில்கள், புத்தகப்பை, காலணி, சைக்கிள் ஆகிய அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறினார்.

6,240 பேருக்கு விலையில்லா மிக்சி

அதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சியின் 2–வது வார்டுக்கு உள்பட்ட 2 ஆயிரத்து 307 பேருக்கும், 3–வது வார்டுக்கு உள்பட்ட 1,983 பேருக்கும், 5–வது வார்டுக்கு உள்பட்ட 1,950 பேருக்கும் என மொத்தம் 6 ஆயிரத்து 240 பேருக்கு ரூ.2 கோடியே 59 லட்சம் மதிப்புள்ள விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.கணேஷ், ஈரோடு ஆர்.டி.ஓ. வை.குணசேகரன், ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கே.வி.மணிமேகலை, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தலைவர் பி.சி.ராமசாமி, மண்டலக்குழு தலைவர்கள் மனோகரன், ஆர்.முனியப்பன், பி.கேசவமூர்த்தி, பி.காஞ்சனா பழனிச்சாமி, சிறப்பு திட்ட செயலாக்கம் தனித்துணை கலெக்டர் ரவி, தாசில்தார் சாகுல் அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

வருகிற 18–ந் தேதி முதல் அனுப்பானடி, நெல்பேட்டையில் தான் ஆடுவதை செய்ய வேண்டும் மேயர் ராஜன் செல்லப்பா அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி            16.12.2013

வருகிற 18–ந் தேதி முதல் அனுப்பானடி, நெல்பேட்டையில் தான் ஆடுவதை செய்ய வேண்டும் மேயர் ராஜன் செல்லப்பா அறிவிப்பு

வருகிற 18–ந் தேதி முதல் அனுப்பானடி, நெல்பேட்டையில் தான் ஆடுவதை செய்ய வேண்டும் என்று மேயர் ராஜன் செல்லப்பா அறிவித்துள்ளார்.

நீர்தேக்க தொட்டி

மதுரை மாநகராட்சி 50–வது வார்டு நெல்பேட்டை காயிதே மில்லத் நகரில் ஆடுவதை கூடம் பயன்பாடற்று கிடந்தது. எனவே இந்த கூடத்தை மாநகராட்சி சார்பில் சீரமைக்கும் பணி நடந்தது. அதற்காக டைல்ஸ் அமைத்து மேற்கூரை அமைக்கப்பட்டது. மேலும் ஆழ்துழாய் கிணறு, மேனிலை நீர்தேக்க தொட்டி, கழிப்பறைகள் மற்றும் பேவர் பிளாக் என ரூ.55 லட்சத்து 60 ஆயிரத்தில் பணிகள் நடந்தன.

இந்த சீரமைப்பு பணிகள் முடிந்ததால், திறப்பு விழா நடந்தது. மேயர் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு ஆடுவதை கூடத்தை திறந்து வைத்தார்.

மாசில்லா நகரம்

பின்னர் அவர் பேசியதாவது:–

தமிழக முதல்–அமைச்சரின் ஆலோசனையின்படி மதுரை மாநகராட்சியை மாசில்லா நகரமாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன்படி இந்த ஆடுவதை செய்யும் இடம் சுகாதரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தினை சுத்தமாக பரமாரிக்க வேண்டும்.

அனுப்பானடி நவீன ஆடுவதை கூடமும் சீர்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கோட்டை சுவர் உயர்த்தும் பணி, நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

18–ந் தேதி முதல்...

மதுரை மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட ஆடுவதை செய்பவர்கள் அனுப்பானடி அல்லது நெல்பேட்டை ஆடுவதை செய்யும் இடங்களில் தான் வருகிற 18–ந் தேதி முதல் ஆடுவதை செய்ய வேண்டும். வேறு இடங்களில் ஆடுவதை செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கமிஷனர் கிரண்குராலா, அண்ணாத்துரை எம்.எல்.ஏ., துணை மேயர் கோபாலகிருஷ்ணன், நகர் பொறியாளர் மதுரம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 251 of 3988