Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ரூ1.50 கோடி மதிப்பில் ஆனந்தா பாலத்தில் இணைப்பு சாலை மேயர், ஆணையாளர் நேரில் ஆய்வு

Print PDF

தினகரன்           12.12.2013

ரூ1.50 கோடி மதிப்பில் ஆனந்தா பாலத்தில் இணைப்பு சாலை மேயர், ஆணையாளர் நேரில் ஆய்வு

சேலம், : சேலம் மாநகராட்சி ஆனந்தா மேம்பாலத்தில் ரூ1.50 கோடியில் இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை மேயர், ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சேலம் மாநகரின் மையப்பகுதியான ஆனந்தா மேம்பாலத்தை அகலப்படுத்தி, இணைப்பு சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான திட்டப்பணிகள் சில வருடங்களுக்கு முன்பு துவங்கியது. இதற்காக தனியாரிடமிருந்து ரூ2.90 கோடி மதிப்பிலான 10ஆயிரத்து 364 சதுரடி நிலத்தை மாநகராட்சி கிரயம் செய்தது. இதையடுத்து தற்போது பணிகள் நிறைவு பெற்று தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதனை சேலம் மாநகர மேயர் சவுண்டப்பன், மாநகராட்சி ஆணையாளர் அசோகன், துணைமேயர் நடேசன் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மண்டலக்குழு தலைவர்கள் ஜெயபிரகாஷ், மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியன், சித்ரா, செயற்பொறியாளர் காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆனந்தா பாலத்தில் ரூ1.50 கோடியில் இணைப்பு சாலை அமைத்து தார்போட்டு, தெருவிளக்குகள் அமைக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. ஒரு வாரத்திற்குள் பணிகள் நிறைவு பெற்று, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த சாலை அர்ப்பணிக்கப்படும். நெரிசலை கருத்தில் கொண்டு இதனை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தலாமா? என்பது குறித்து போக்குவரத்து போலீசாரிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.

 

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு வீதி நாடகம்

Print PDF

தினகரன்           12.12.2013

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு வீதி நாடகம்

திருச்சி, : திருச்சி மாநகராட்சி காந்தி மார்க்கெட் முன்பு மேயர் ஜெயா தலைமையில் சுகாதார அலுவலர் மாரியப்பன் முன்னிலையில் நேற்று பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு வீதி நாடகத்தினை பரதாலய குழு இயக்குனர் சத்தியன் குழுவினர் நேற்று நடத்தினர்.

நாடகத்தில், டெங்கு காய்ச்சல் வராமல் இருப்பதற்கான விபரங்களை பொதுமக்களுக்கு நடித்து காட்டினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள், கொட்டாங்குறிச்சி, டயர், உடைந்த மண்பானை, உரல், ஆட்டுக்கல் போன்றவற்றில் நீர் தேங்காமல் இருப்பதற்கும், தெருக்களில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், கழிவறை பயன்படுத்திய பின் சுத்தமாக சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் தடுக்கவும், தேவையற்ற பொருட்களை உடன் அப்புறப்படுத்த கோரியும் மக்கள் எளிதில் புரிந்துக் கொள்ளும் வண்ணம் நடித்து காட்டினார்கள். மேலும், டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் மாநகராட்சி மருத்துவ மனைகளில் சென்று பரிசோதித்து கொள்ளுமாறும் நாடகத்தில் அறிவுறுத்தப்பட்டது.

 

கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு

Print PDF

தினகரன்           12.12.2013

கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு

கோவை, : கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை ஈரோட்டில் நடக்கவுள்ள மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாடு வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் நடக்கவுள்ளது. இதற்கான மாவட்ட அளவிலான போட்டி கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. இதில் கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வித்யபிரியா, தீபா ஸ்ரீ, கஸ்தூரி, பாத்திமா, வித்யா ஆகி யோரின் ஆய்வு கட்டுரை தேர்வு செய்யப்பட்டது.

தற்போது இந்த மாணவிகளின் மனித ஆற்றல் என்ற தலைப்பின் கீழ் ‘மனித சமுதாயம் நோய்களை நோக்கி செல்கிறது’ என்ற ஆய்வு கட்டுரை மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கருத்துகள் உள்ளது.

மேலும், இம்மாணவிகள் ரத்தினபுரி பகுதியில் துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து துண்டு பிரசுரங்களையும் தற்போது வினியோகித்து வருகின்றனர். இந்த மாநில அளவிலான மாநாட்டில் வெற்றி பெறும் பட்சத்தில் மாணவிகளின் ஆய்வு கட்டுரை 21வது தேசிய அளவிலான குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்படும்.

 


Page 260 of 3988