Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சி மகளிர் பள்ளியில் நாப்கின் எரிக்கும் நவீன இயந்திரம்

Print PDF

தினமணி      22.01.2015

மாநகராட்சி மகளிர் பள்ளியில் நாப்கின் எரிக்கும் நவீன இயந்திரம்

மதுரை, ஜன.20:    மதுரை மாநகராட்சி காக்கைப்பாடினியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவியர் உபயோகிக்கும் நாப்கின்களை எரிக்கும் நவீன இயந்திரத்தை

செவ்வாய்க்கிழமை மேயர் விவி ராஜன்செல்லப்பா இயக்கிவைத்தார்.

தமிழகத்திலேயே மதுரை மாநகராட்சி பள்ளியில் முதல்முறையாக இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி பள்ளியில் பயிலும்

மாணவிகள் உபயோகிக்கும் துடைப்பக்குட்டைகளை (நாப்கின்) சுகாதாரமான முறையில் அழிக்கும் இயந்திரம் காக்கைப்பாடினியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்

அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை இயக்கி வைக்கும் விழா செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் சி.கதிரவன் தலைமையில்

நடைபெற்றது. மேயர் விவி ராஜன்செல்லப்பா இயந்திரத்தை இயக்கி வைத்து பேசியது: மதுரை மாநகராட்சியில் பயிலும் மாணவியரின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு

இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக இப்பள்ளியில், நாப்கின்களை சுகாதாரமான முறையில் அழிக்கும் வகையில் இந்த இயந்திரம்

வைக்கப்பட்டுள்ளது.

ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் 9 பெரிய நாப்கின் டிஸ்போஸரும், 4 சிறிய நாப்கின் டிஸ்போஸரும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காக்கைப்பாடினியார் மகளிர்

மேல்நிலைப்பள்ளியில் பெரிய இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று  ஈவெரா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெரிய டிஸ்போஸரும், பொன்முடியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மணிமேகலை மேல்நிலைப்பள்ளியில் சிறிய

இயந்திரமும் அமைக்கப்படும். தொடர்ந்து மற்ற மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவியரின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நவீன இயந்திரம் வைக்கப்படும்.

 மேலும், மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் தமிழகத்தில் முதல் மதிப்பெண்களை பெறும் வகையில், சனிக்கிழமை தோறும்

சிறப்பு ஊக்குவிப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சியில் ஈடுபடும் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ஊட்டச்சத்து மிக்க தானியப்பயறு வகைகள்

வழங்கப்படுகின்றன என்றார்.

இவ்விழாவில் நகர்நல அலுவலர் சண்முகசுந்தரம், கல்வி அலுவலர் ராஜேந்திரன், பிஆர்ஓ சித்திரவேல், காக்கைப்பாடினியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை

எழிலரசி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

 

கழிவு நீரை சாலையில் விட்டவருக்கு ரூ.2ஆயிரம் அபராதம்

Print PDF
தினமணி       22.01.2015

கழிவு நீரை சாலையில் விட்டவருக்கு ரூ.2ஆயிரம் அபராதம்


மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் புதன்கிழமை உதவி ஆணையர் அ.தேவதாஸ் தலைமையில் வட்டார சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.

அப்போது, 98-ஆவது வார்டு ஜோசப் நகரில் கார்த்திகேயன் என்பவரது வீட்டிலிருந்து கழிவுநீர் சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. இப்பகுதியை ஆய்வு செய்த அலுவலர்கள், டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியதாக, அவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்ததாக, உதவி ஆணையாளர் தேவதாஸ் தெரிவித்தார். இவ்வாறு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவோருக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
 

அடுக்குமாடி குடியிருப்புகளில் கொசு தடுப்பு ஆலோசனை

Print PDF

தினமணி     22.01.2015

அடுக்குமாடி குடியிருப்புகளில் கொசு தடுப்பு ஆலோசனை

மதுரை மாநகராட்சிப் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுப்பது குறித்து புதன்கிழமை தெற்கு மண்டல அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வசுதாரா குடியிருப்போர் நலச்சங்கம், அக்ரிணி குடியிருப்போர் நலச்சங்கம், சத்தியசாய்நகர் ராம்ஸ் குடியிருப்போர் நலச்சங்கம், ஏஆர்வி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், துரைச்சாமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், அபர்ணா குடியிருப்போர் நலச்சங்கம், முனியாண்டிபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்து உதவி ஆணையர் அ.தேவதாஸ் பேசியது: கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்க ஆணையர் சி.கதிரவன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இம்மண்டலத்தில் சுழற்சி முறையில் கொசு ஒழிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரக்கேட்டை விளைவிப்போருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் மாடிப்பகுதியிலோ, சாலைகளிலோ தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளிலுள்ள குளிர்சாதன பெட்டிகளின் பின்பகுதியில் தண்ணீர் சிந்தும் பகுதிகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். பூந்தொட்டிகளில் அதிகளவில் தண்ணீரை ஊற்றி கொசு உற்பத்தி வழிவகுக்க கூடாது என்றார்.

கூட்டத்தில், மண்டல உதவி நிர்வாக பொறியாளர் காமராஜ், வட்டார சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வக்குமார், தங்கப்பாண்டியன், ஆறுமுகம், சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 27 of 3988