Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

வள்ளுவர் கோட்டத்தில் குப்பை அகற்றம்

Print PDF

தினகரன்           12.12.2013  

வள்ளுவர் கோட்டத்தில் குப்பை அகற்றம்

சென்னை, : நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கழிவுகள் மற்றும் குப்பை அகற்றப்படாமல் வள்ளுவர் கோட்ட வளாகத்திலேயே குவிக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி, வள்ளுவர் கோட்ட வளாகத்தில் குவிந்திருந்த குப்பை, கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தியது. இது தொடர்பாக, தேனாம்பேட்டை மண்டல அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வள்ளுவர் கோட்டம் உள்ளே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள குப்பை கழிவுகள் முழுவதும் அகற்றப்பட்டுவிட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை 50 கிலோ இறைச்சி பறிமுதல்

Print PDF

தினகரன்             11.12.2013

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை 50 கிலோ இறைச்சி பறிமுதல்

கோவை, :கோவை  மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சாலை யோரம் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றன. சாலை யோரம் 3 கம்புகளை நட்டி அதில் ஆடு, கோழி இறைச்சிகளை தொங்க விட்டு விற்பனை செய்கின்றனர். 

சுகாதாரமற்ற முறை யில் இறைச்சி விற்பனை செய்வதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. மாநகராட்சி அனுமதி பெறா மல் இறை ச்சி விற்ப னை செய்தால் அவற்றினை பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை செய்தும், அதனை பொருட்படுத்தாமல் பிராதன சாலை களின் ஓரத்தில் திறந்த வெளியில் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதை தொடர்ந்து மாநகராட்சி கால்நடை மருத்துவரும், மிருகசாலை இயக்குநருமான டாக்டர் அசோகன் தலைமையில் மேற்பார்வையாளர் ஸ்ரீராம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 5 பேர் நேற்று  கவுண்டம்பாளையம் முதல் துடியலூர் வரை சாலையோரங்களில் திறந்த வெளி யில் இறைச்சி விற்பனை செய்த கடை களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 10 இறைச்சி கடைக ளில் நடைபெற்ற இச்சோதனையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த 50 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். கடைகளுக்கு ரூ.17,000 அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என மாநகராட்சி கால்நடை மருத்துவர் அசோகன் தெரிவித்தார்.

 

மணலி, மறைமலைநகரில் 255 மனைகள் விற்பனை: குலுக்கல் முறையில் ஒதுக்க சி.எம்.டி.ஏ., முடிவு

Print PDF

தினமலர்              11.12.2013

மணலி, மறைமலைநகரில் 255 மனைகள் விற்பனை: குலுக்கல் முறையில் ஒதுக்க சி.எம்.டி.ஏ., முடிவு

சென்னை : மறைமலை நகர், மணலி, சாத்தாங்காடு, கோயம்பேடு பகுதிகளில் உள்ள, 255, குடியிருப்பு, வணிக மனைகள் மற்றும் கடைகள், குலுக்கல் முறையில் ஒதுக்கீடு, செய்யப்படும் என, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) அறிவித்து உள்ளது. சென்னை, பெருநகர் பகுதியில், புதிதாக துணை நகரங்களை ஏற்படுத்தும் நோக்கில், மறைமலை நகர், மணலி புது நகர் பகுதிகளில், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டன.

இதே போன்று, சாத்தாங்காடு இரும்பு எஃகு அங்காடி, கோயம்பேடு காய், கனி மொத்த விற்பனை அங்காடி ஆகியவற்றில் கடைகளும், வணிக மனைகளும் விற்பனையாகாமல் உள்ளன. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும், இவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனைகள், பல ஆண்டுகளாக ஒதுக்கப்படாமல், உள்ளன. இதனால், சி.எம்.டி.ஏ.,வுக்கு, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய், வருவாய் இழப்பு ஏற்படுவதாக, தணிக்கை அறிக்கைகளில், சுட்டி காட்டப்பட்டு உள்ளது.

255 மனைகள் இதில், மறைமலை நகர் பகுதியில், குடியிருப்பு, வணிக பயன்பாட்டுக்கான, 105 மனைகள், மணலி புது நகரில், 82 மனைகள், சாத்தாங்காடு பகுதியில், 64 மனைகள், கோயம்பேடு அங்காடி பகுதியில் நான்கு கடைகள் என, மொத்தம், 255 மனைகள் மற்றும் கடைகள் விற்பனைக்கு உள்ளன. இவற்றை, குலுக்கல் முறையில், ஒதுக்கீடு செய்வதற்கான, அறிவிப்பை சி.எம்.டி.ஏ., வெளியிட்டு உள்ளது.

இதன்படி, குடியிருப்பு, வணிக மனைகளை பெறவும், கடைகள் ஒதுக்கீடு பெற விரும்புவோர், விண்ணப்பிக்கலாம். இதற்கான, விண்ணப்பங்களை சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட, விண்ணப்பங்களுடன் 'முதன்மை செயல் அலுவலர், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்' என்ற பெயரில் எடுக்கப்பட்ட, 1,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை இணைத்து, அனுப்ப வேண்டும். இந்த பதிவு கட்டணம் திருப்பி தரப்படமாட்டாது.

விண்ணப்பிக்கும் வழிகள்....

பூர்த்தி செய்யப்பட்ட, விண்ணப்பங்கள் அனைத்தும், 2014 ஜனவரி, 6ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இதுகுறித்த, கூடுதல் விவரம் பெற, சென்னை, எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் முது நிலை உடைமை அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். குலுக்கல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு சி.எம்.டி.ஏ., அறிவித்து உள்ளது.

 


Page 261 of 3988