Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்

Print PDF

தினமணி              10.12.2013

மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை மாநகராட்சி நடத்திய சிறப்பு மருத்துவ முகாம்களில் 3.89 லட்சம் பேர் கலந்து கொண்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் மொத்தம் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை 5 நாள்களாக நடைபெற்றன. இந்த முகாம்கள் பெரும்பாலும், ஏழை மக்கள் அதிகம் உள்ள குடிசைப் பகுதிகளில் நடத்தப்பட்டதால், அதிகளவில் மக்கள் ஆர்வமுடன் முகாமில் பங்கேற்றனர். வார்டுக்கு ஒரு இடம் என தினமும் 200 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன. ஒவ்வொரு வார்டிலும் வெவ்வேறு 5 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு இடத்தில் முதன்மை முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் மொத்தம் 3,89,228 பேர் பங்கேற்று பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பெற்றனர். இதில் அதிகபட்சமாக முதல் நாளில் 86,240 பேர் கலந்துகொண்டனர். முகாம்களுக்கு ஆண்களை விட பெண்களே அதிகம் வந்தனர். 5 நாள்களிலும் சேர்த்து மொத்தம் 1,22,005 ஆண்களே முகாம்களுக்கு வந்தனர். ஆனால், 1,73,332 பெண்கள் வந்துள்ளனர். 48,430 சிறுவர்களும், 45,461 சிறுமிகளும் மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மாநகராட்சியில் தட்டச்சர் காலிப் பணியிடம் அறிவிப்பு

Print PDF

தினமணி              10.12.2013

மாநகராட்சியில் தட்டச்சர் காலிப் பணியிடம் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் பணியில் சேருவது தொடர்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை மாநகராட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் காலிபணியிடத்துக்கு தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. கல்வித் தகுதியுடைய தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் உயர்நிலையும், சுருக்கெழுத்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றில் உயர்நிலையும் மற்றொன்றில் இளநிலையும் தேர்ச்சி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் இந்த பணியிடத்திற்கு தேர்வுச் செய்யப்படவுள்ளனர். தகுதியுடைய நபர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநரை உரிய சான்றிதழ்களுடன் அலுவலக வேலை நாள்களில் டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குடிநீர் கட்டணம் கட்டாததால் 25 வீடுகளில் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தமிழ் முரசு                09.12.2013

குடிநீர் கட்டணம் கட்டாததால் 25 வீடுகளில் இணைப்பு துண்டிப்பு

பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.  வீடுகளுக்கு 1001 குடிநீர் இணைப்புகள் உள்ளன. முறையாக குடிநீர் கட்டணம் செலுத்தாததால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு இரண்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இருப்பினும் சிலர் சரிவர குடிநீர் கட்டணம் கட்டவில்லை.

இதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு பயன்படுத்தும் நபர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி கட்டணத்தை செலுத்துமாறு பேரூராட்சி நிர்வாகம் வற்புறுத்தியது.

ஆனாலும் 999 இணைப்பு தாரர்கள் பணம் கட்டவில்லை. இதனால் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் தேவதாஸ், துப்புரவு மேற்பார்வையாளர் மதியழகன், பேரூராட்சி ஊழியர்கள், பொன்னேரி போலீஸ் உதவியுடன் 1&வது வார்டுக்கு உட்பட்ட சின்னகாவனம் பகுதியில் 25 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டித்தனர். மேலும் கட்டணம் கட்டாத நபர்கள் உடனடியாக கட்ட வேண்டும் அல்லது இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 


Page 265 of 3988