Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

துப்புரவு பணியாளர்களுக்கு சலவைப்படி வழங்க வலியுறுத்தல்

Print PDF

தினகரன்                09.12.2013

துப்புரவு பணியாளர்களுக்கு சலவைப்படி வழங்க வலியுறுத்தல்

கரூர், : பள்ளப்பட்டி பேரூராட்சி ஊழியர்கள் சங்க கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தங்கராஜ் தலைமை வகித்தார். சங்க பொருளாளர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் தலைவராக தங்கராஜ், செயலாளராக பழனிசாமி, பொருளாளராக காளியம்மாள் உட்பட பல்வேறு நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.

பள்ளப்பட்டி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு குடியிருக்க வீடுகள் கட்டித்தர வேண்டும். பள்ளப்பட்டி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும். அரசாணையின்படி பேரூராட்சி பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சலவைப்படி வழங்க வேண்டும். பெண்களுக்கு சீருடை தையற்கூலி ரூ.200 உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ஆத்தூர் நகராட்சி பகுதியில் 16 நாட்களுக்கு ஒருமுறை காவிரி குடிநீர் விநியோகம்

Print PDF

தினகரன்                09.12.2013

ஆத்தூர் நகராட்சி பகுதியில் 16 நாட்களுக்கு ஒருமுறை காவிரி குடிநீர் விநியோகம்

ஆத்தூர், : ஆத்தூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் 16 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, நகராட்சியின் மூலம் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர், வீட்டு இணைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, மழை அதிக அளவில் பெய்துள்ள போதிலும் நகராட்சி பகுதியில் தேவையான அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, நகராட்சியின் மூலம் வீட்டு குழாய்களில் காவிரி குடிநீர், 16 தினங்களுக்கு ஒருமுறை தான் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், மேட்டூரிலிருந்து, நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. இது போதுமானதாக இல்லாத காரணத்தால், இவ்வாறு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால், 16 நாட்களுக்கு ஒருமுறையும் குறைந்த அளவே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முறையாக வழங்கப்படாத குடிநீருக்கு நகராட்சி நிர்வாகத்தால் கட்டணம் மட்டும் சரியாக வசூலிக்கப்படுகிறது. நகராட்சிக்கு செலுத்தும் குடிநீர் வரிக்கு, தனியார் வாகனங்களில் வாங்கும் அளவிற்கு கூட நகராட்சி குடிநீர் விநியோகம் செய்வதில்லை. இவ்வாறு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

 

கீழப்பாவூர் பகுதியில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுப்பு

Print PDF

தினகரன்                09.12.2013

கீழப்பாவூர் பகுதியில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுப்பு

பாவூர்சத்திரம், : கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்ட பகுதிகளில் ஆதார் அட்டை போட்டோ எடுக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நலத்திட்டங்கள் மக்களை நேரிடையாக சென்று அடையும் வகையில் இனிவரும் காலத்தில் ஆதார் அட்டை பயன்படும் முக்கியத்துவம் பெறுவதாக அமையும் என்பதால் பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை பெற  ஆவலாக   உள்ள னர்.

இந்த ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது. பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 27ம் தேதி முதல் போட்டோ எடுத்து வருகின்றனர்.

நேற்று 12வது வார்டுக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்தது. மற்ற வார்டுகளுக்கும் புகைப்படம் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.

 


Page 266 of 3988