தினமலர் 07.12.2013
நகராட்சி அலுவலகத்திற்குபுதிய கட்டடம் கட்டும் பணி
சிதம்பரம்:சிதம்பரம் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் கட்டும் பணிக்காக பூமி பூஜை விழா நடந்தது.சிதம்பரம் நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு 2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனை தொடர்ந்து, புதிய கட்டடம் கட்டும் பணிக்காக பூமி பூஜை @நற்று நடந்தது. விழாவிற்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செல்வராஜ் தலைமை தாங்கினார்.
நகரமன்ற தலைவி நிர்மலா சுந்தர் பூமி பூஜை öŒ#து பணியை துவக்கி வைத்தார். 2.5 கோடியில் 1.25 கோடி மானியமாகவும். 1.25 கோடி நிதி நகராட்சி சார்பிலும் செலவிடப்படுகிறது. விழாவில், துணைத் தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் ரமேஷ், தியாகு, சிகாமணி, ஜெயவேல், ராஜன், பானுமதி, ஒப்பந்ததாரர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இரண்டு தளம் கொண்ட புதிய அலலுவலகம் கட்டும் பணியை ஒரு ஆண்டுக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.