Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நகராட்சி அலுவலகத்திற்குபுதிய கட்டடம் கட்டும் பணி

Print PDF

தினமலர்            07.12.2013

நகராட்சி அலுவலகத்திற்குபுதிய கட்டடம் கட்டும் பணி

சிதம்பரம்:சிதம்பரம் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் கட்டும் பணிக்காக பூமி பூஜை விழா நடந்தது.சிதம்பரம் நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு 2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனை தொடர்ந்து, புதிய கட்டடம் கட்டும் பணிக்காக பூமி பூஜை @நற்று நடந்தது. விழாவிற்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செல்வராஜ் தலைமை தாங்கினார்.

நகரமன்ற தலைவி நிர்மலா சுந்தர் பூமி பூஜை öŒ#து பணியை துவக்கி வைத்தார். 2.5 கோடியில் 1.25 கோடி மானியமாகவும். 1.25 கோடி நிதி நகராட்சி சார்பிலும் செலவிடப்படுகிறது. விழாவில், துணைத் தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் ரமேஷ், தியாகு, சிகாமணி, ஜெயவேல், ராஜன், பானுமதி, ஒப்பந்ததாரர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இரண்டு தளம் கொண்ட புதிய அலலுவலகம் கட்டும் பணியை ஒரு ஆண்டுக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.2.50 கோடியில் கட்டடம்

Print PDF

தினமணி             07.12.2013

சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.2.50 கோடியில் கட்டடம்

சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.2.50 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சிதம்பரம் நகராட்சி தற்போதைய அலுவலகத்துக்குப் பின்புறம் அடிப்படை வசதி மேம்பாட்டு நிதி ரூ 1.25 கோடி, நகராட்சி நிதி ரூ 1.25 கோடி, ஆக மொத்தம் ரூ.2.50 கோடி செலவில் நகராட்சி நிர்வாக அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார், மூத்த நகர்மன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், நகராட்சி எழுத்தர் காதர்கான் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 

இலவச கண் சிகிச்சை முகாம்

Print PDF

தினமணி             07.12.2013

இலவச கண் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி நகராட்சி, திருநெல்வேலி வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம், நகர்நல மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்காக நடத்தப்பட்ட இம்முகாமை  நகராட்சி ஆணையர் சுல்தானா தொடங்கி வைத்தார். கண் மருத்துவ நிபுணர் உஷா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுமார் 200 பேருக்கு பரிசோதனை செய்தனர்.   ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.

 


Page 269 of 3988