தினமணி 07.12.2013
ரூ. 14.23 லட்சத்தில் நாய் பிடிக்கும் வாகனம்
திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ. 14.23 லட்சத்தில் நாய் பிடிக்கும் வாகனம் புதிதாக வாங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தை மேயர் அ. ஜெயா, ஆணையர் வே.ப. தண்டபாணி ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டனர். முன்னதாக கீழரண் சாலை, குதுப்பா பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் உணவின் தரம் குறித்தும் அவர்கள் சாப்பிட்டுப் பார்த்தனர்.
மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியே சேகரிக்கும் வகையில் வாங்கப்பட்டுள்ள 800 குப்பைத் தொட்டிகளையும் மேயர் பார்வையிட்டார். கீழரண் சாலையில் லாரி நிறுத்துமிடத்தில் ஓட்டுநர்களுக்காக தங்கும் இடம், குளியலறை, கழிப்பறை அமைக்கவுள்ள இடமும் பார்வையிடப்பட்டது.
இóந்த ஆய்வின்போது, துணை மேயர் மரியம் ஆசிக், அரியமங்கலம் கோட்டத் தலைவர் ஜெ. சீனிவாசன், உதவி ஆணையர் பாஸ்கரன் உள்ளிóட்டோர் உடனிருந்தனர்.