Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

இணைப்பை துண்டிக்காமல் இருக்க உடனடியாக வரி செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம்

Print PDF

தினமணி      22.01.2015

இணைப்பை துண்டிக்காமல் இருக்க உடனடியாக வரி செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம்

குடிநீர் இணைப்பைத் துண்டிக்காமல் இருக்க உடனடியாக குடிநீர் வரியைச் செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி: சென்னை மாநகராட்சி சொத்து வரியாக நிர்ணயித்துள்ள தொகையில் 7 சதவீத தொகையைக் குடிநீர், கழிவுநீர் வரியாக குடிநீர் வாரியத்துக்குச் செலுத்த வேண்டும். குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெறாவிட்டாலும் இந்த தொகையை பொதுமக்கள் செலுத்த வேண்டும்.

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சொத்து வரியுடன் சேர்த்து குடிநீர் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனிமேல் இந்த வரியை தனியாக குடிநீர் வாரியத்துக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டும்.

சென்னையில் நுகர்வோர்கள் அனைவரும் நிலுவை தொகை, நடப்புக் கேட்புத் தொகைகளை உடனடியாக செலுத்தி, கூடுதல் வரிவிதிப்பு, இணைப்பு துண்டிப்பைத் தவிர்க்க வேண்டும்.

சென்னையில் நீண்ட நாள்களாக குடிநீர் வரியை செலுத்த தவரும் வணிக வளாகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் நிலுவைத் தொகை செலுத்தத் தவறியவர்களுக்கு குடிநீர் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் 15 நாள்களுக்குள் வரி செலுத்த வேண்டும். இப்போது நிலுவையில் உள்ள தொகையை பொதுமக்கள் உடனியாக செலுத்த வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சியால் ஏழ்மைநிலை குறைகிறது: உலக வங்கி

Print PDF
தினமணி            22.01.2015

இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சியால் ஏழ்மைநிலை குறைகிறது: உலக வங்கி

"நகரமயமாதலால், இந்தியாவில் ஏழ்மை நிலை குறைந்து வருகிறது' என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து "தெற்காசியாவில் ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ளும் போக்கு' என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

2004-2005 மற்றும் 2009-2010ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்திய மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களில் 40 சதவீதம் பேர், வறுமை நிலையில் இருந்து முன்னேறியுள்ளனர்.

அதே காலகட்டத்தில், வறுமையிலும், மிகவும் பின்தங்கிய நிலையிலும் இருந்த மக்களில் குறிப்பிட்ட அளவினர், அதாவது இந்திய மக்கள்தொகையில் 9 சதவீதம் பேர் அல்லது வறுமையில் இருந்த 11 சதவீதம் பேர், நடுத்தர வர்க்கத்தினராக உயர்ந்து விட்டனர்.

இருப்பினும், இந்திய மக்கள்தொகையில் 9 சதவீதம் பேர் அல்லது வறுமையில்லாத பிரிவைச் சேர்ந்த மக்களில் 14 சதவீதம் பேர், வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் புள்ளிவிவரங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 2014ஆம் ஆண்டில், இந்தியாவில் வறுமை நிலையில் இருந்து முன்னேறியவர்களின் எண்ணிக்கையானது, வளர்ந்த நாடான அமெரிக்காவில் வறுமை நிலையில் இருந்து முன்னேறியவர்களின் எண்ணிக்கைக்கு இணையாகவே இருக்கும் எனத் தெரிகிறது என்று உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்காசியாவுக்கான உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநர் மார்டின் ரமா தெரிவிக்கையில், "கடைக்கோடியில் இருப்பவர்களின் நாடாக இந்தியா இனிமேல் நீடிக்காது; சில பிரகாசமான அம்சங்கள் உள்ளன. இதுவொரு நல்ல செய்தியாகும்' என்றார்.

இதுகுறித்து உலக வங்கியின் இந்தியாவுக்கான இயக்குநர் ஆன்-நோ ரூகுல் தெரிவிக்கையில், "நகரமயமாதலால், இந்தியாவில் வறுமை நிலை குறைந்து வருகிறது; வறுமை நிலையை அது அதிகரிக்கவில்லை' என்றார்.
 

மதுரை மாநகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற திரையரங்குகள், மருத்துவமனைகளுக்கு அபராதம்

Print PDF

 தினமலர்                14.01.2015

மதுரை மாநகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற திரையரங்குகள், மருத்துவமனைகளுக்கு அபராதம்

மதுரை மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த மருத்துவமனைகள், திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கொசு உற்பத்தியாகும் வகையில் இருக்கும்

கட்டடங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை ஆணையாளர் சி.கதிரவன் உத்தரவின் பேரில், 4 மண்டலத்துக்கும் உள்பட்ட பகுதிகளில் உதவி ஆணையாளர்கள் தலைமையில், திருமண மண்டபங்கள்,

திரையரங்குகள், மருத்துவமனைகள், பள்ளிகள், தனியார் வணிக வளாகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 12 தனியார் மருத்துவமனைகள், 8 திரையரங்குகள், 5 திருமண மண்டபங்கள், 3 தனியார்

பள்ளிகள், 2 தனியார் வணிக வளாக கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த வகையில், மண்டலம் 1-ல் உதவி ஆணையாளர் ஆர். குணாளன் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் ரூ.30 ஆயிரமும், மண்டலம் 2-ல் உதவி ஆணையாளர்

பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வில் ரூ.10,000-ம், மண்டலம் எண் 3-ல் உதவி ஆணையாளர் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற ஆய்வில் ரூ.5,000-ம்,

மண்டலம் எண் 4-ல் ரூ.5,000-ம் ஆக மொத்தமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள மாநகராட்சி மூலம் கட்டட உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வின் போது

சுகாதாரக்கேடு தெரியவந்தால், அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆய்வின் போது, சுகாதார ஆய்வாளர்கள் வீரன், கோபால், ராஜ்கண்ணன் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

 


Page 28 of 3988