Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மீண்டும் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற புதுப்பொலிவு பெறும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்

Print PDF

தினகரன்             29.11.2013

மீண்டும் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற புதுப்பொலிவு பெறும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்

மதுரை, : மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்டில் புகை, ஒலி மாசை தடுக்கும் வகையில் புது வகை செடிகள், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மீண்டும் ஐஎஸ்ஓ தரம் பெறுவதற்காக புதுப் பொலிவு பெற்றுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு அன்றாடம் 725 வெளியூர் அரசு பஸ்கள், 140 தனியார் பஸ்கள், 160 சிட்டி பஸ்கள், 26 மினி பஸ்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 40 முறை வந்து செல்கின்றன. இதனால் 24 மணி நேரமும் புகை வெளி யேறி நச்சுத் தன்மையும், ஒலி மாசும் அதிகரித்து வருகிறது.

இதனை கிரகித்து, ஆக்சிஜனை வெளியிடும் இயல்புகொண்ட பலவகை பூஞ்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் பஸ் ஸ்டாண்டின் உள்பகுதியை சுற்றிலும் மாநகராட்சி சார்பில் புதிதாக நடப்பட்டுள்ளன. சிட்டி பஸ்கள் நிற்கும் பகுதியில் மத்தியில் உள்ள பூங்காவானது செயற்கை நீருற்று, புல் வெளி, புள்ளிமான் உருவம், மின் விளக்கு அலங்காரத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அரளி, மகிழம் பூ, செண்பகம், பிளேம் ஆப் தி பாரஸ்ட், மஞ்சள் கொன்னை, காதித பூ, நந்தியா வட்டு, அடுப்பு மல்லி, மரம் வல்லி போன்ற பூக்கும் செடிகள் குவிந்துள்ளன. வெப்பத்தை தணிக்கும் வேம்பு, புங்கன், இலுப்பை போன்ற மரக்கன்று வகைகள் உள்பட 6 ஆயிரத்து 500 செடி, மரக்கன்றுகள் நடப்பட்டுள் ளன. பசுமையான புல் தரைகள், வன விலங்கு, பறவை உருவங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இது அழகிய தோற் றத்தை உருவாக்கி உள்ளது.

இந்த பணிகளை மாநகராட்சி சார்பில் செய்து முடித்துள்ள வனத்துறை ஓய்வு பெற்ற ரேஞ்சர் ராஜகோபால் கூறும்போது, “வனத்துறையில் பணிபுரிந்த அனுபவத்தின் அடிப்படையிலான எனது யோச னையை மேயர் ராஜன்செல்லப்பா ஏற்று அனுமதி அளித்தார். அதன்படி பஸ் ஸ்டாண்டில் புகை, ஒலி மாசுவை கிரகித்து ஆக்சி ஜன் வெளியிடும் செடி, மரங்கள், புல் வெளிகள் அமைத்து இயற்கை சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் செடிகள், புல் தரை கள் அமைக்கப்படும். அழ கிய தோற்றம் காணப்படும்போது, அதில் சிறு நீர் கழிப்பதை தவிர்க்க வாய் ப்பு ஏற்படும். துர் நாற்றம் வீசாமல் தடுக்க முடியும். பராமரிப்புக்காக தனியாக ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்“ என்றார்.

மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்ட் 1999ல் திறக்கப்பட்டது. 2007ல் ஐஎஸ்ஓ தரம் பெற்றது. அதன் காலம் முடிந்து இடைக்காலத்தில் சீர்குலைவு ஏற்பட்டது. தற்போது மீண்டும் ஐஎஸ்ஓ தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் புகை, ஒலி மாசு தடுப்பு முக்கிய இடம் பெறுகிறது. இதனை ஐஎஸ்ஓ தரச் சான்று குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது. பஸ் ஸ்டாண்ட்டின் முன் ஆட்டோ, டாக்சிகளுக்கு டைல்ஸ் தளத்துடன் தனி இடம், அருகில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் என மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ முன் பதிவு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் செயல்படவில்லை. குறிப்பிட்ட இடங்களுக்கு ஆட்டோ டிரைவர் கள் ஏற்றுக்கொண்ட கட்டணம் “டிஸ்பிளே“ செய்யப்படும் என்றார்கள். அதையும் காணோம். ஆட்டோ கட்டணத்தை ஆர்டிஓ மூலம் மாவட்ட கலெக்டர் நிர்ணயித்து, போலீஸ் கமிஷனர் இணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஆட் டோ முன் பதிவு நிலையம் செயல்பட முடியும்.

 

தனியார் பங்களிப்புடன் சாலை அமைக்கும் திட்டம் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்கிறது மாநகராட்சி

Print PDF

தினமலர்             29.11.2013

தனியார் பங்களிப்புடன் சாலை அமைக்கும் திட்டம் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்கிறது மாநகராட்சி

சென்னை:திருவனந்தபுரம் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டதை போன்று, தனியார் பங்களிப்புடன் புதிய சாலை அமைக்கும் பணிகளை செயல்படுத்த முடியுமா என, சென்னை மாநகராட்சி ஆய்வு பணிகளை துவக்க உள்ளது. திருவனந்தபுரத்தில் தனியார் பங்களிப்புடன் திருவனந்தபுரம் மாநகராட்சியில் நகர சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அதை முன்மாதிரியாக கொண்டு, சென்னை மாநகராட்சியிலும் சாலைகளை தனியார் பங்களிப்புடன் உருவாக்க முடியுமா என, ஆய்வு மேற்கொள்ளுமாறு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது.

அதை அடிப்படையாக கொண்டு, சென்னை மாநகராட்சியில் தனியார் பங்களிப்புடன் சாலைகள் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதில், இதற்கான சாத்தியகூறுகள் குறித்து முதலில் ஆய்வு செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரிவாக்க பகுதிகளில் இன்னும் புதிய சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. அங்கு போக்குவரத்து நெரிசல் கொண்ட பல பிரதான சாலைகளும் மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த தனியார் பங்களிப்பு திட்டத்தை விரிவாக்க பகுதிகளில் செயல்படுத்த முடியுமா என, சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

இதற்காக விரிவாக்க பகுதிகளில் உருவாக்கப்பட வேண்டிய புதிய சாலைகள் குறித்த பட்டியலை மாநகராட்சி தயாரித்து வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திருவனந்தபுரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி, தனியார் நிதி பங்களிப்புடன் சாலைகள் அமைக்கப்படுகின்றன. 15 ஆண்டுகளுக்கு, இந்த சாலைகளை அந்த தனியார் பராமரிக்க வேண்டும்.

இதற்கு நிதி முதலீடு செய்யும் தனியாருக்கு என்னென்ன ஆதாயங்கள் வழங்கப்படுகின்றன என தெரியவில்லை. அதை பொறுத்து சென்னையில் இந்த திட்டம் சாத்தியமா என, முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி, தனியார் நிதி பங்களிப்புடன் சாலைகள் அமைக்கப்படுகின்றன. 15 ஆண்டுகளுக்கு இந்த சாலைகளை அந்த தனியார் பராமரிக்க வேண்டும்.

Last Updated on Friday, 29 November 2013 10:25
 

பவானியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினத்தந்தி             29.11.2013

பவானியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பவானி பஸ்நிலையத்தில் உள்ள நடைபாதையில் வியாபாரிகள் கடைகளை அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். அதனால் பஸ்நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் குடிநீர் தொட்டி மற்றும் கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டன. அதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கோபி உதவி கலெக்டர் சந்திரசேகரசாகமுரியிடம் புகார் மனு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து உதவிகலெக்டர், பவானி பஸ்நிலையத்தில் நேற்று முன்தினம் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நகராட்சி ஊழியர்களிடம் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள கடைகளை அகற்றும் படி உத்தரவிட்டார். அதன்பேரில் ஊழியர்கள் நேற்று காலை 11 மணி அளவில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

அதைத்தொடர்ந்து பவானி பஸ்நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கும், நடந்து செல்வதற்கும் இடவசதி உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறினர்.

 


Page 288 of 3988