Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

செங்கோட்டை நகரசபையில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆணையாளர் எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி           27.11.2013

செங்கோட்டை நகரசபையில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆணையாளர் எச்சரிக்கை

செங்கோட்டை நகரசபையில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆணையாளர் எச்சரிக்கை

செங்கோட்டை

செங்கோட்டை நகரசபை ஆணையாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

செங்கோட்டை நகரசபை பகுதியில் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, காலிமனை வரி உள்பட பல்வேறு வரி இனங்களை செலுத்தாதவர்கள் உடனடியாக நகரசபை அலுவலக கணினி மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். ஜப்தி போன்ற நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்த்து பொதுமக்கள் நகரசபைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

மாநகராட்சி குறைதீர் கூட்டம் அடிப்படை வசதிகள் கேட்டு 15 மனுக்கள்

Print PDF

தினகரன்         26.11.2013

மாநகராட்சி குறைதீர் கூட்டம் அடிப்படை வசதிகள் கேட்டு 15 மனுக்கள்

திருச்சி, : திருச்சி மாநகராட்சியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் அடிப் படை வசதி கேட்டு 15 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

திருச்சி மாநகராட்சி யில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ஜெயா தலைமை வகித்தார். இதில் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலை மேம் பாடு, பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்கவும், கழிவறைகள் மற்றும் பூங்காக்களை பராமரிப்பது உள்ளிட்ட 15 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட மேயர் ஜெயா, உரிய அதிகாரிகள் தள ஆய்வு செய்து மனுதாரர்களுக்கு பதில் அளிக்கும்படி தெரிவித்தார்.

இதில் 49வது வார்டு மீனாட்சி தோப்பு பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: எங்கள் பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி க்கு மட்டும் வடிகால் வாய்க் கால், குடிநீர் வசதி, சாலை வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். இது பற்றி மாநகராட்சியில் முறையிட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர். முகாமில் ஆணையர் தண்டபாணி, நகர பொறி யாளர் சந்திரன், நகர் நல அலுவலர் மாரியப்பன், செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி ஆணை யர் ரங்கராஜன், தனபால், உதவி செயற்பொறியாளர் பாலகுருநாதன், கண்ணன், ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.

 

எல்லா கழிவுப்பொருளையும் இயற்கை உரமாக்க வேண்டும்

Print PDF

தினகரன்         26.11.2013

எல்லா கழிவுப்பொருளையும் இயற்கை உரமாக்க வேண்டும்

திருச்சி, : திருச்சி சங் கம் ஓட்டலில் மத்திய பிளா ஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார் பில் பிளாஸ்டிக் கழிவு களை கையாள்வது மற்றும் மறுசுழற்சி செய்வது பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து மத் திய உரம் மற்றும் ரசாயன அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுப்புராஜ் ஐஏ எஸ் பேசியதாவது:

20ம் நூற்றாண்டின் முக் கிய கண்டுபிடிப்புகளில் பிளாஸ்டிக்கும் ஒன்று. இன்று இந்தியாவில் மட் டும் சராசரியாக நபர் ஒரு வர் நாளொன்றுக்கு சுமார் 8 கிலோ பிளாஸ்டிக் பயன்படுத்தி வருகிறார். உலகள வில் ஒப்பிட்டு பார்க்கும் போது நாம் பயன்படுத்தும் அளவு மிக குறைவு தான். அன்றாட வாழ்வில் பிளாஸ் டிக் பயன்பாட்டை தவிர்ப் பது கடினம் என்ற அளவு க்கு நம்முடைய பயன்பாட் டில் பிளாஸ்டிக் கலந்து விட்டது. நாம் பயன்படுத் தும் பிளாஸ்டிக்கில் பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்துபவை பிளாஸ்டிக் பைகள் தான்.

குப்பையில் போடப்ப டும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறை, எவ்வாறு இந்த கழிவுகளை கையாள்வது என்பது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற் பட வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த பல்வேறு தவறான கருத்துக்கள் மக்களிடம் உள்ளது. அதை போக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 20 நகரங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நட த்தி வருகிறோம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளும் பிளாஸ்டிக் மட்டுமின்றி எல்லா கழிவுபொருட்களையும் இயற்கை உரமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி பேசுகையில், பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பது சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. திருச்சி மாநகராட்சியில் 1,600 துப்புரவு பணியாளர்களை கொண்டு நபர் ஒருவர் நாளொன்றுக்கு குறைந்தது 3 கிலோ பிளா ஸ்டிக் கழிவுகளை கண்டறிந்து சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவ் வாறு சேரும் கழிவுகள் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. பிளா ஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகை யில் பல்வேறு நடவடிக்கை களை மாநகராட்சி எடுத்து வருகிறது. மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளு க்கு இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேலும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

இதைதொடர்ந்து பிளா ஸ்டிக் மறுசுழற்சி குறித்து விளக்கப்படங்கள், கலந்தாய்வு நடந்தது. திருச்சி மாந கர மேயர் ஜெயா, மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற் றும் தொழில்நுட்ப மையத் தின் முதன்மை மேலாளர் சுகுமார் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 296 of 3988