Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ.320.39 கோடி ரூபாய்: தமிழக அரசிடம் எதிர்பார்க்கப்படும் நிதி

Print PDF

தினமலர்               25.11.2013

பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ.320.39 கோடி ரூபாய்: தமிழக அரசிடம் எதிர்பார்க்கப்படும் நிதி

திருப்பூர் : "திருப்பூர் மாவட்டத்தில், நான்கு நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில், 320.39 கோடி ரூபாயில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,' என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளிலும், பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக, கடந்த நிதி யாண்டில், உடுமலை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டது; 56.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அங்கீகாரம் பெறப்பட்டது. அதன்பின், 38.93 கோடி ரூபாய்க்கு தொழில்நுட்ப அங்கீகாரம் வழங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அனைத்து மாநகராட்சிகளிலும் நடைமுறையில் இருப்பதைபோல், அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உடுமலை நகராட்சியில் பணிகள் நடந்து வருவதால், அடுத்த கட்டமாக, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், தாராபுரம் நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற உள்ளன.

அவிநாசி, திருமுருகன்பூண்டி உட்பட மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் இந்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதேபோல், திருமூர்த்தி அணை தளி வாய்க்காலை நீராதாரமாக கொண்டு, குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள், உடுமலையில் மூன்று ஊராட்சிகள் என 26 ஊராட்சிகளுக்காக, 54.70 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகளும் துவங்கியுள்ளன.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நீங்கலாக, மற்ற நான்கு நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 320.39 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரித்து, அரசு அங்கீகாரத்திற்காக கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது."இதேபோல், சில குடிநீர் திட்டங்களுக்கும் நிர்வாக அனுமதி கோரி கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,' என்றனர்.

 

21 இடங்களில் "நம்ம டாய்லெட்' டூ ரூ. 3.98 கோடி செலவில் திட்டம்

Print PDF

தினமலர்               25.11.2013

21 இடங்களில் "நம்ம டாய்லெட்' டூ ரூ. 3.98 கோடி செலவில் திட்டம்

கோவை :கோவை மாநகர எல்லைக்குள் 21 இடங்களில், 3.98 கோடி ரூபாய் செலவில் "நம்ம டாய்லெட்' அமைக்கப்படுகிறது. இதனால், ரோட்டோரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறையும்; ரோடும் சுத்தமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாநகராட்சி சார்பில், வெளியூர் பயணிகள், பாதசாரிகள் பயன்படுத்துவதற்காக, "நம்ம டாய்லெட்' அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக, ஈச்சனாரியில் பரிட்சார்த்த முறையில், அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது 21 இடங்களில், 3.98 கோடி ரூபாய் செலவில் "நம்ம டாய்லெட்' அமைக்கப்படுகிறது. இதற்காக, சென்னை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது.

டிச., முதல் வாரத்தில், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும். கழிப்பிடம் இருப்பதை தெரிவிக்கும் வகையில், ரோடுகளில் 200 மீட்டருக்கு முன் அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

ஈச்சனாரியில் ஐந்து ஆண்டுகள் உத்தரவாதத்துடன், "நம்ம டாய்லெட்' அமைக்கப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 600 பேர் பயன்படுத்துகின்றனர். கிழக்கு மண்டலத்தில் அவிநாசி ரோடு சிட்ரா (ரூ. 21 லட்சம் மதிப்பீடு), சவுரிபாளையம் கக்கன் நகர் (ரூ.23 லட்சம்), காளப்பட்டி பிரதான சாலை (ரூ.24.50 லட்சம்), முத்துமேடு - பெண்கள் (ரூ.14 லட்சம்), காளப்பட்டி (ரூ.14 லட்சம்), நேரு நகர் பஸ் ஸ்டாப் (ரூ.24.5 லட்சம்), சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் (ரூ. 14 லட்சம்) ஆகிய ஏழு இடங்களில் அமைக்கப்படுகிறது.

மேற்கு மண்டலத்தில், பூசாரிபாளையம் சாலை - பெண்கள் (ரூ. 28 லட்சம்), வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகில் (ரூ. 24.5 லட்சம்), வீரகேரளம் மனோஜ்நகர் (ரூ. 24.5 லட்சம்), கவுண்டம்பாளையம் மயானம் (ரூ. 24.5 லட்சம்) ஆகிய நான்கு இடங்களில் அமைக்கப்படுகிறது.

வடக்கு மண்டலத்தில், வெள்ளக்கிணறு உருமாண்டாம்பாளையம் (ரூ. 14 லட்சம்), விளாங்குறிச்சி - சரவணம்பட்டி ரோடு (ரூ.24.5 லட்சம்) ஆகிய இரண்டு இடங்களில் அமைக்கப்படுகிறது. தெற்கு மண்டலத்தில், கோணவாய்க்கால்பாளையம் -பெண்கள் (ரூ. 21 லட்சம்), பொள்ளாச்சி பிரதான சாலை ஈச்சனாரி - பெண்கள் (ரூ. 11 லட்சம்), அன்னபுரம் (ரூ. 14 லட்சம்), என்.டி.பி. வீதி சுண்டக்காமுத்தூர் (ரூ. 21 லட்சம் ), வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகில் (ரூ.14 லட்சம்) ஆகிய ஐந்து இடங்களில் அமைக்கப்படுகிறது.

மத்திய மண்டலத்தில், உக்கடம் பஸ் ஸ்டாண்ட், வ.உ.சி., மைதானம், மத்திய பஸ் ஸ்டாண்ட் (நகர்) ஆகிய மூன்று இடங்களில், தலா ரூ. 14 லட்சம் மதிப்பில் "நம்ம டாய்லெட்' அமைக்கப்படுகிறது. ஐந்து முதல் எட்டு பேர் பயன்படுத்தும் வகையில் தனித்தனி அறை அமைக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளம், சோலார் மின் விளக்கு வசதி, மேல்நிலைத்தொட்டி, செப்டிக் டேங்க், நவீன டேப் வசதியுடன் அமைக்கப்படும். இதற்காக, 3.98 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரோடு சுத்தமா இருக்கும்: "கோவை மாநகர எல்லைக்குள், இலவச கழிப்பிடம், பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டிருந்தாலும், பல இடங்களில் ரோட்டோரத்தை திறந்தவெளி கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

அதனால், "நம்ம டாய்லெட்' அமைக்கும் இடங்களில், வழித்தடத்துடன் அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது. இதனால், ரோட் டோரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறையும்; ரோடும் சுத்தமாக இருக்கும்' என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ரூ.2¾ லட்சம் கல்வி உதவித்தொகை மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி வழங்கினார்

Print PDF

தினத்தந்தி             25.11.2013

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ரூ.2¾ லட்சம் கல்வி உதவித்தொகை மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி வழங்கினார்

தூத்துக்குடியில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சத்து 71 ஆயிரத்து 800 கல்வி உதவித்தொகையை மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி வழங்கினார்.

கல்வி உதவித்தொகை

தூத்துக்குடி எல்.ஐ.சி. நிறுவனமும், மகாசேமம் அறக்கட்டளையும் இணைந்து ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சுந்தரவேல்புரத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மகாசேமம் மண்டல மேலாளர் எஸ்.பாஸ்கரசேதுபதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி கலந்து கொண்டு 453 குழந்தைகளுக்கு ரூ.2 லட்சத்து 71 ஆயிரதது 800 மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மகாசேமம் கிளை மேலாளர் டி.கார்த்திகை ராஜன், மகளிர் சுய உதவிக்குழு தலைவியும், தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி மகளிர் அணி செயலாளர் ஆர்.ராஜலட்சுமி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

 


Page 299 of 3988