Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: மேயர் சாந்தகுமாரி

Print PDF

தினமணி      31.12.2014

பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை:  மேயர் சாந்தகுமாரி

பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சாந்தகுமாரி தெரிவித்தார்.

 பெங்களூருவில் மாநகராட்சி ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மேயர் சாந்தகுமாரி சந்தித்தார். அப்போது அவரிடம் ஊழியர்கள் சங்கத் தலைவர் தயானந்த் கூறியது: பெங்களூரு மாநகராட்சியைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் வேறு துறைகளில் இருந்து பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றிவரும் அதிகாரிகளை அந்தந்த துறைக்கே திரும்பப் பணியிடமாற்றம் செய்ய வேண்டும். வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யப் போவதாக மாநகராட்சி ஆணையர் லட்சுமிநாராயணா ஏற்கெனவே உறுதி அளித்திருந்தார்.

 ஆனால், அதை ஆணையர் செயல்படுத்தவில்லை. மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள திட்டப் பிரிவு அதிகாரிகளை சிலர் தாக்கினர். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்கள் தர்னா போராட்டம் தொடரும் என்றார்.

 மேயர் சாந்தகுமாரி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

 அதில் தோல்வி ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தனது அறைக்கு வரவழைத்துக் கூறியது: மாநகராட்சி ஊழியர்கள் தங்களது பிரச்னைகளை தெரிவித்துள்ளனர்.

 அவர்களது கோரிக்கையை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டியுடன் ஆலோசனை செய்து, பரிவோடு பரிசீலிக்கப்படும். விரைவில் அவர்களின் கோரிக்கை அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும்.

 எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அதைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதை ஏற்று, ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.

 

உள்வாடகைக்கு விடப்பட்ட பேருந்து நிலைய வணிக வளாக நகராட்சி கடை பொது ஏலம்

Print PDF
தினமணி      31.12.2014

உள்வாடகைக்கு விடப்பட்ட பேருந்து நிலைய வணிக வளாக நகராட்சி கடை பொது ஏலம்

மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள நகராட்சிக்கடை ஒன்று, உயர்நீதிமன்ற ஆணைப்படி பொது ஏலத்தில் விடப்பட்டது.

மேட்டுப்பாளையம் நகராட்சி கட்டுப்பாட்டில் நகரின் பல்வேறு இடங்களில் 239 வணிக வளாக கடைகள் உள்ளன. இதில் பேருந்து நிலைய வளாகம் மற்றும் அண்ணா வணிக வளாகத்தில் மட்டும் 97 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு ள்ளன. இந்த கடைகள் கடந்த 1984-ம் ஆண்டுமுதல் குறைந்த வாடகைக்கு விடப்பட்டிருந்ததால், நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லாமலிருந்து வந்தது. சமீபத்தில் நகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலைய கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது பெரும்பான்மையான கடைகளின் முன்னும், பின்னும் இட ங்களை ஆக்கிரமிப்பு செய்து, அதில் கடைகளை கட்டி உள்வாடகைக்கு விட்டி ருப்பதும் தெரிய வந்தது. இதன் மூலம் நகராட்சிக்கு வாடகையாக மாதம் ரூ 2700 செலுத்தும் ஒருவர், உள்வாடகை மூலம் மட்டும் மாதம் ரூ 20,000 வரை வருமானம் ஈட்டுவது கண்டறியப்பட்டது.

இதை தொடர்ந்து நகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க செய்யும் வகையில், பேருந்துநிலைய ஆக்கிரமிப்புக்களை அகற்றி, கடைகளை புதியதாக பொது ஏலம் விடவும் நகராட்சியில் புதியதாக பதவியேற்ற ஆணையர் சரவணக்குமார் நடவடி க்கை மேற்கொண்டார். அதை தொடர்ந்து பேருந்து நிலைய வணிக வளாகத்தில்  நகராட்சி சார்பில் மேற்கொண்ட ஆய்வில் 27-ம் எண் கொண்ட கடை உள்வாட கைக்கு விட்டிருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 1984-ம் ஆண்டு அன்னூர் சர் வோதய சங்கத்தின் சார்பில் வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த கடைக்கு ரூ 2706 வாடகை செலுத்தி வந்ததும், பின்னர் வேறொருவருக்கு உள்வாடகைக்கு விட்டு அதிக வாடகை வசூலிப்பது்ம் தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைக்கு நக ராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதை தொடர்ந்து உள்வாடகைக்கு விடப்பட்ட கடையை மறு ஏலத்தில் விடுவதா க நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த ஏலத்திற்கு தடை விதி க்கக்கோரி அன்னூர் சர்வோதய சங்கத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதற்கு ஆதரவாக வேறு சில கடைக்காரர்களும், நகர மன்ற உறுப்பினர்கள் 13 பேரும் உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த னர். இந்த மனுக்கள் மீது விசாரனை நடத்திய உயர்நீதிமன்றம், நகராட்சி எடுத்த முடிவு சரியானதெனவும், சீல் வைக்கப்பட்ட கடையை மட்டுமின்றி, அனைத்து கடைகளையும் நகராட்சி பொது ஏலம் விடலாமெனக் கூறி, அனைத்து மனுக்க ளையும் கடந்த 12-ம் தேதி தள்ளுபடி செய்தது. அதையடுத்து 27-ம் எண் கொண் ட கடையை, டிச. 29-ல் பொது ஏலம் விட நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியி டப்பட்டது.

அதன்படி திங்கட்கிழமை (டிச.29) நகராட்சி ஆணையர் சரவணக்குமார் முன்னி லையில் நகராட்சி மேலாளர் சித்தார்த்தன் நடத்திய ஏலத்தில், 27-ம் எண் கடை மாத வாடகையாக ரூ 16,500-க்கு ஏலம் போனது. இதனை மீனாட்சிசுந்தரம் என்பவர் ஏலத்தில் எடுத்தார். இந்த கடைக்கு முந்தைய ஏலத்தில் ரூ 2706 மட்டு மே வாடகை செலுத்தப்பட்டு வந்தது. இந்த கடையை புதியதாக ஏலம் விட்டதன் மூலம் நகராட்சியின் வருவாய் 6 மடங்கு வரை அதிகரித்துள்ளது. ஆண்டிற்கு ரூ 32 ஆயிரம் மட்டுமே வாடகை வருவாயை பெற்றுத்தந்த இந்த கடை தற்போது ரூ 1.98 லட்சம் வரை வாடகை வருவாய் கிடைக்க நகராட்சிக்கு வழி ஏற்படுத்தி தந்துள்ளது. அதேபோல் இங்குள்ள 208 கடைகளையும் புதியதாக பொது ஏலத் திற்கு விட்டால், தற்போது மாதம் ரூ 75-லட்சமாக இருக்கும் நகராட்சி வருவாய் ரூ 3 கோடிக்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே அனைத்து கடைகளை யும் மீண்டும் பொது ஏலம் விட்டு நகராட்சியின் வருவாயை அதிகரிக்கச் செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
 

தென்னிந்தியாவில் மாசில்லா மாநகரமாக மதுரை தேர்வு: மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தகவல்

Print PDF
தினமணி        31.12.2014

தென்னிந்தியாவில் மாசில்லா மாநகரமாக மதுரை தேர்வு: மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தகவல்

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவில் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் 4,909 ஏழைப் பெண்களுக்கு தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து மேயர் மேலும் பேசியது:

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து நலத்திட்டங்களும் மதுரை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்பினர். இன்று பயனடையும் 5 ஆயிரம் பயனாளிகளும் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதங்களை மாலையில் அனுப்பி வைக்கவுள்ளனர். இவ்வளவு 5ஆயிரம் பேர் ஒரே நாளில் நன்றிக் கடிதம் அனுப்பி வைப்பது இதுவே முதல்முறையாகும்.   .

 இம் மாநகராட்சியில், அம்மா திட்டம் என்கிற அழகிய மாநகரத் திட்டத்தை  செயல்படுத்தி வருகிறோம். இதன் மூலம் மாநகரில் எங்கும் குப்பைகள் தேங்காமலும், சுகாதாரக்கேடு ஏற்படாத வகையிலும் சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ) தென்னிந்தியாவில் நடத்திய ஆய்வில் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகரைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது. இது ஜெயலிலதாவின் சீரிய திட்டமான அழகிய மாநகர திட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். தொடர்ந்து மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கு கூடுதல கவனம் செலுத்தப்படும் என்றார்.

 விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி பகுதியில் 4,004 பயனாளிகளுக்கும், புறநகர் பகுதியில் 905 பயனாளிகளுக்கும், ஆக மொத்தமாக 4,909 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்கம், திருமண நிதியுதவிக்கான காசோலைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

 மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மராஜ், எம்எல்ஏக்கள் தமிழரசன், ஏகே போஸ், முத்துராமலிங்கம், சுந்தர்ராஜன், துணை மேயர் கு.திரவியம், மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து, நிலைக்குழுத் தலைவர்கள் கண்ணகி பாஸ்கரன், சுகந்தி அசோக், எஸ்டி ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநகராட்சி நகர்நல அலுவலர் யசோதாமணி வரவேற்றுப் பேசினார். மாவட்ட சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி நன்றி கூறினார்.
 


Page 31 of 3988