Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம்: முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினபூமி         21.11.2013

ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம்: முதல்வர் திறந்து வைத்தார்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Chennai-Amma-Mess-CM_Inagurate(C).jpg 

சென்னை, நவ.21 - சென்னை அரசு ஆஸ்பத்திரியில்  அம்மா உணவகத்தை    முதல்வர் ஜெயலலிதா நேற்று  காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:_

சென்னை மாநகரில் வாழும் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் அம்மா உணவகங்கள் முதல்_அமைச்சர் ஜெயலலிதாவால் 19.2.2013 அன்று தொடங்கி வைக்கப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் ஏழை எளிய மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி, பொங்கலுடன் சாம்பாரும், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர்சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோன்று ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் சென்னை, அரசு பொது மருத்துவமனையிலும் ஒரு அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் கோரியிருந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையிலும், அதிக அளவில் ஏழை, எளிய மக்கள் வந்து செல்லும் மருத்துவமனை என்பதைக் கருத்தில் கொண்டும், சென்னை, அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 5100 சதுர அடி பரப்பளவில், ஒரே நேரத்தில் சுமார் 300 பேர் சாப்பிடும் வகையிலும், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல சாய்வு தளம் அமைத்தும், அவர்கள் சிரமமின்றி அமர்ந்து சாப்பிடும் வகையில் தாழ்வான மேஜை உள்ளிட்ட வசதிகளுடன் அம்மா உணவகம் அமைத்திட முதல்_அமைச்சர் ஜெயலலிதா உத்திரவிட்டார். அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அம்மா உணவகத்தை முதல்_அமைச்சர் ஜெயலலிதா நேற்று  காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

அனைத்து நகராட்சிகளிலும் நவீன கழிப்பறைகள்

Print PDF

தினமணி          21.11.2013 

அனைத்து நகராட்சிகளிலும் நவீன கழிப்பறைகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், சென்னை நீங்கலான அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கழிப்பறையான "நம்ம டாய்லெட்' அமைக்கும் பணி 4 மாதங்களில் நிறைவுபெறும் என நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே கூறினார்.

உலகக் கழிவறை தினத்தையொட்டி பல்லாவரத்தில் நகராட்சிப் பள்ளி மற்றும் பொதுக்கழிப்பறைகளில் முழுமையான துப்புரவு மேற்கொள்ளும் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமினை நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் தொடங்கி வைத்தார்.

பின்னர் குரோம்பேட்டை பஸ் நிலையம், கோதண்டன் நகர், சி.எல்.சி.லைன் ஆகிய இடங்களில் உள்ள கழிப்பறைகளை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் திறந்தவெளியினைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவதை ஒழிக்கும் வகையில், முழுமையான கழிப்பறை வசதிகள் அமைக்கும் பணி தமிழகம் முழுக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தாம்பரத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட "நம்ம டாய்லெட்' திட்டம், பொதுமக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முழுமையான வசதிகளுடன் தூய்மையாகவும், குறைபாடற்ற கழிவறையாக சிறந்த முறையில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதுதான் "நம்ம டாய்லெட்' திட்டத்தின் வெற்றிக்குக் காரணம்.

தற்போது ஸ்ரீரங்கம், ஊட்டி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், சென்னை நீங்கலான அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கழிப்பறையான "நம்ம டாய்லெட்' அமைக்கும் பணி 4 மாதங்களில் நிறைவுபெறும் நகராட்சி, மாநகராட்சிகளில் அமைக்கப்படும்.

நம்ம டாய்லெட் கழிப்பறைகளை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆர்.லட்சுமி, பொறியாளர் வெங்கட்ராஜ், பல்லாவரம் நகர்மன்றத் தலைவர் கே.எம்.ஆர். நிசார்அகமது, துணைத்தலைவர் டி.ஜெயபிரகாஷ், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 

லால்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்

Print PDF

தினகரன்          21.11.2013  

லால்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்

லால்குடி,: திருச்சி மாவட்டம் லால்குடி பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சுதாராணி விஜயமூர்த்தி தலைமை வகித்தார். செயல் அலுவலர் முத்துகுமார் முன்னிலை வகித்தார்.முகாமில் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை 15 மற்றும் 16,18 வார்டுகளில் குப்பை அகற்றுதல், சாக்கடை சுத்தம் செய்தல், பொதுக் கழிவறை சுத்தம் செய்தல் உள்பட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. முகாமில் வார்டு கவுன்சிலர்கள் நிஜாமுதின், மஞ்சுளா செல்வம், நித்தியா கிருஷ்ணமூர்த்தி, ராஜம் காத்தான், கதிரேசன் பேரூராட்சி பணியாளார்கள் கலந்து கொண்டனர்.

 


Page 306 of 3988