Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மத்திய பேருந்து நிலையத்தில் அசுத்தப்படுத்தினால் அபராதம்

Print PDF

தினகரன்          21.11.2013  

மத்திய பேருந்து நிலையத்தில் அசுத்தப்படுத்தினால் அபராதம்

திருச்சி, : திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு  அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வா கம் அறிவித்துள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று மாநகராட்சி மேயர் ஜெயா, ஆணையர் தண்டபாணி ஆகியோர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மத்திய பேருந்து நிலையத்தில் ரூ.13.50 லட்சம் மதிப்பில் நம்ம கழிவறை கட்டப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தனர். ரூ. 11 லட் சம் மதிப்பில் நடைபெற்று வரும்  கண்காணிப்பு கோபுர கட்டிட வேலை களையும் பார்வையிட்டனர். கண்காணிப்பு கோபுரம் கட்டிடத்தில் கலை அம்சங் கள் கொண்ட ஓவியங்கள் வடிவமைக்க வேண்டும். சுயஉதவி குழு மூலம் சுற் றுலா தகவல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று மேயர் ஆலோசனை அளித்தார்.

மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்கனவே 2 இடங்களில் ஆண்களுக்காகவும், ஒரு இடத்தில் பெண்களுக்காகவும் இலவச கழிவறை கள் பயன்பாட்டில் உள் ளது. மேலும் 3 இடங்களில் கட்டண கழிவறைகளும் உள்ளன. இந்த அனைத்து கழிவறைகளும் தற்பொழுது மைக்ரோ ஆர்கனிஸம் என் னும் தண்ணீர் கலந்து மருந்து தெளிக்கப்பட்டு துர்நாற்றம் இல்லாத வகை யில் பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே மத்திய பேருந்து நிலையத்தில் சுற்று ப்புற சுகாதாரத்தை காத் திட திறந்த வெளியில் சிறு நீர் கழித்திட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி தொடர்ந்து மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். அந்த இடத்தி லேயேரசீதும் வழங்கப் படும். இதே போல் மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளி லும் திறந்த வெளி யில் சிறு நீர் கழிப்பதை தடுத்திட முக்கிய இடங்க ளில் சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்படவுள்ளன.

மாநகர மக்கள் சுற்றுப்புற சுகாதாரத்தை தூய்மையாக பராமரித்திட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணையர் தண்ட பாணி தெரிவித்தார். ஆய்வின்போது துணை மேயர் மரியம் ஆசிக், பொன்மலை கோட்டத்தலைவர் மனோகரன், செயற்பொறியாளர் நாகேஷ், உதவி செயற்பொறியாளர் லெட்சுமணமூர்த்தி ஆகி யோர் உடன் இருந்தனர்.திருச்சி,: சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் டி.ஆர்.பி. பொறியியில் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

 சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார் பில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரி தனி அதிகாரி பாண்டியராஜன் துவக்கி வைத்தார். முகா மில் கல்லூரியில் நான்காம் ஆண்டு பி.இ.படிக்கும் எந்திர பொறியி யல், மின் னியல்- மின்னணு பொறியி யல் பிரிவு மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். இதில் 7 பேர் தேர்ந்தெடுக் கப்பட்டனர். அவர்களுக்கு கல்லூரி முதல்வர் தமிழ ரசன் தனியார் நிறுவனத் தின் பணி நியமன ஆணை களை வழங்கினார். நிகழ்ச் சியில் தனியார் நிறுவன அதிகாரிகள் கார்த்திக், சிவ குமார், சார்லஸ், சரவணன், கல்லூரி துணை முதல்வர் பிரபாகர்,கல்லூரி பணி அமர்த்துதல் பிரிவு அதிகா ரியும், உதவி பேராசிரியரு மான விக்டர்சூசை இருதய ராஜ், துறைத்தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ரூ. 5.94 லட்சம் நிதி பசுமை பூங்கா அமைக்க அள்ளித்தந்த வள்ளல்கள்

Print PDF

தினகரன்          21.11.2013  

ரூ. 5.94 லட்சம் நிதி பசுமை பூங்கா அமைக்க அள்ளித்தந்த வள்ளல்கள்

திருச்சி,: திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப் பூர் பசுமை பூங்கா அமைக் கும் திட்டத்தில் மரங்கள் வளர்க்க பசுமை ஆர்வலர் கள் நேற்று வரை 198 பேர் ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் வைப்பு நிதி  வழங்கியுள்ளனர். ஆர்வம் உள்ளவர் கள் இந்த திட்டத்தில் பங்கேற்க மாநகராட்சி ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி பொன்மலைக் கோட்டம் பஞ்சப்பூரில் மாநகராட் சிக்கு சொந்தமான 5 ஏக் கர் நிலப் பரப்பில் பசுமை பூங்கா உருவாக்கப்படுகிறது.

இதில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மூலிகை செடிகள், தியான மண்டபம், சிறிய அளவில் விலங்கியல் பூங்கா, ஏழு உலக அதிசயங்களின் மாதிரிகள், சிறுவர்கள் பய ன்படுத்தும் ரயில் வண்டி ஆகியவை அமைக்கப்படுகிறது.

பசுமை திட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பசுமை ஆர்வலர்களிடம் ரூ.3 ஆயிரம் வைப்பு தொகை யாக பெற்றுக் கொண்டு அவர்களின் பெயரில் ஒரு மரம் வளர்த்து மாநகராட்சியால் பராமரிக்கப்படும். இப்பசுமை திட்டத்தில் திருச்சி மகாத்மா காந்தி பள்ளியில்  6ம் வகுப்பு படி க்கும் மாணவி அக் ஷயா திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணியிடம் ரூ.3 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

பசுமை திட்டத்திற்கு ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்டங்களில் இதுவரை மொத்தம் 198 பேர் தங்கள் பெயரில் மரம் வளர்க்க இணைத்துக் கொண்டு ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். மேலும் பசுமை பூங்காவில் தங்கள் பெயரில் மரம் வளர்க்க ஆர்வம் உள்ளவர் கள் திருச்சி மாநகராட்சி அலுவலர்களை அணுகலாம்.

இதுதொடர்பான விபரங்களை அறிய 76395- 66000 என்கிற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தெரிவித்தார்.

 

பிளாஸ்டிக் கழிவு கொடுத்த 3 பேருக்கு தங்க நாணயம்

Print PDF

தினகரன்          21.11.2013  

பிளாஸ்டிக் கழிவு கொடுத்த 3 பேருக்கு தங்க நாணயம்

திருவொற்றியூர், : பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் தனரமேஷ் தலைமை வகித்தார்.

தலா 500 பேர் வீதம் 3 குலுக்கல் நடத்தப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3  பேருக்கு அரை கிராம் தங்க நாணயம், 12 பேருக்கு கைக்கடிகாரம் ஆகியவற்றை மண்டல உதவி ஆணையர் காங்கேயன் கென்னடி வழங்கினார். மண்டல அதிகாரிகள் காளிமுத்து, விஜயராகவன், கவுன்சிலர்கள் சூரியபாபு, அமுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


Page 307 of 3988