Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

டிசம்பர் 15–ந் தேதிக்குள் குடிநீர் குழாயில் வால்வு பொருத்த அறிவுறுத்தல்

Print PDF

தினத்தந்தி           21.11.2013

டிசம்பர் 15–ந் தேதிக்குள் குடிநீர் குழாயில் வால்வு பொருத்த அறிவுறுத்தல்

மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 19, 26, 27 ஆகிய பகுதிகளுக்கான புதிய குடிநீர் திட்டப் பணிகள் முடிவடைந்து, முதல்–அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் பயன்பெறும் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய குடிநீர் குழாய் இணைப்புகளில் “ப்ளோ கண்ட்ரோல்“ எனப்படும் குடிநீர் கட்டுப்படுத்தும் கருவியை குடிநீர் குழாயில் இணைக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் இது பொருத்தப்படாமல் உள்ளது.

அடுத்த மாதம் (டிசம்பர்) 15–ந் தேதிக்குள் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி வால்வு பெற்று இளநிலை பொறியாளர் முன்னிலையில் பொருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் எவ்வித அறிவிப்பும் இன்றி குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர்–9442201305, இளநிலை பொறியாளர்– 9442201334 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவல் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) த.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

திருச்சி மத்திய பஸ் நிலைய வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க தடை, மீறினால் உடனடி அபராதம் ஆணையர் தண்டபாணி எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி           21.11.2013

திருச்சி மத்திய பஸ் நிலைய வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க தடை, மீறினால் உடனடி அபராதம் ஆணையர் தண்டபாணி எச்சரிக்கை

திருச்சி மத்திய பஸ் நிலைய வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறினால் உடனடி அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தண்டபாணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

மத்திய பஸ் நிலையத்தில் ஆய்வு

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மாநகராட்சி மேயர் ஜெயா, ஆணையர் தண்டபாணி, துணைமேயர் மரியம் ஆசிக் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது ரூ.13½ லட்சம் மதிப்பீட்டில் நம்ம கழிவறை கட்டப்பட உள்ள இடத்தை பார்வையிட்டனர். மேலும் 11 லட்சம் செலவில் கண்காணிப்பு கோபுரம் கட்டுமான கட்டிட வேலைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து ஆணையர் தண்டபாணி கூறியதாவது:–

சிறுநீர் கழிக்க தடை

மத்திய பஸ் நிலையத்தில் ஏற்கனவே 2 இடங்களில் ஆண்களுக்காகவும், ஒரு இடத்தில் பெண்களுக்காகவும் இலவச கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் 3 இடங்களில் கட்டண கழிவறைகளும் உள்ளன. இவை அனைத்தும் மைக்ரோ ஆர்கனிசம் என்னும் தண்ணீர் கலந்த மருந்து தெளிப்பின் மூலம் துர்நாற்றம் இல்லாத வகையில் பராமரிக்கப்பட உள்ளன. எனவே மத்திய பஸ் நிலையத்தில் சுற்றுப்புற சுகாதாரத்தை காத்திட திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி தொடர்ந்து மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு அந்த இடத்திலேயே ரசீதும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

‘தட்டான் பூச்சிகளின் அழிவே டெங்கு காய்ச்சல் பரவ காரணம்’ மாணவிகளின் ஆய்வு அறிக்கையில் தகவல்

Print PDF

தினத்தந்தி           21.11.2013

‘தட்டான் பூச்சிகளின் அழிவே டெங்கு காய்ச்சல் பரவ காரணம்’ மாணவிகளின் ஆய்வு அறிக்கையில் தகவல்

‘‘தட்டான் பூச்சிகளின் அழிவே மனிதர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணம்’’ என்று மாணவிகள் தங்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.

மாணவிகள் ஆய்வு

மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 9–ம் வகுப்பு மாணவிகள் கவுசல்யா, சாருமதி, மதுமிதா, பிரவீணா, பிரியதர்ஷினி, ருத்ரா, பிரியா, பாண்டிமாதேவி, ஆதித்யா, ஆர்த்தி ஆகியோர், ஆசிரியர் சூர்யகுமார் தலைமையில் கடந்த மாதம் கொசுப்பெருக்கம் தொடர்பாக, ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

அதன்படி, கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிர் பலிகள் அதிகம் நிகழ்ந்த மேலூரிலும், அதன் சுற்றுப்புற கிராமங்களான வல்லாளப்பட்டி, முனியாண்டிபட்டி, மங்களநகர், மல்லிகைநகர், நடுப்பட்டி, தாமரைப்பட்டி, பதினெட்டாங்குடி ஆகிய கிராமங்களிலும் கள ஆய்வு நடத்தினர். அப்போது, டாக்டர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், கிராமமக்கள், கல்லூரி மாணவர்கள் என்று பலதரப்பினரிடம் அவர்கள் கருத்தாய்வு நடத்தினர்.

‘தட்டானின் அழிவு, கொசுக்களின் பெருக்கம்’

பின்பு, தங்களது ஆய்வறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கும், மேலூர் தாசில்தாருக்கும் அளித்தனர். அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

‘‘தட்டான் பூச்சி இனங்கள் கொசுக்களை உணவாக உட்கொள்பவை. ஊசித்தட்டான் போன்ற சிலவகை தட்டான்கள், கொசு முட்டைகளை உணவாக உட்கொண்டு வாழ்பவை.

விவசாய நிலங்களில் சேதி உரங்கள் பயன்படுத்தப்படுவதாலும், செல்போன் டவர்களின் கதிர்வீச்சு, வறட்சி நிலை ஆகியவற்றின் காரணமாகவும் இந்த தட்டான் இனங்கள் அழிந்து வருகின்றன.

இதனால் இயற்கை சமநிலையும், உயிரிப் பல்வகைமையும் (பயோ டைவர்சிட்டி) பாதிக்கப்பட்டு தட்டான் பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி டெங்கு கொசுக்கள் ஊருக்குள் பரவுகின்றன.

டெங்கு கொசுக்கள்

மேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தோண்டப்பட்ட கிரானைட் பள்ளங்களில் தேங்கும் நீரில் இருந்து ‘ ‘ஏடிஸ், எஜிப்டி‘ எனப்படும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த பாறைக்குழிகள் டெங்குவை பரப்பும் கொசு உற்பத்தி மையங்களாக திகழ்கின்றன. இதனால் தான் மேலூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது.

இவற்றை தடுக்க தட்டான்பூச்சி இனங்கள் பெருகிட, அதற்கான வழி வகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விவசாயத்திற்கு ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரத்தை பயன்படுத்தலாம். மேலும் அறுவடை முடிந்த வயல்களில் உள்ள தோகைகளை தீயிட்டுக் கொளுத்துவது, குப்பைக்கூளங்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது, போன்ற வெப்ப நிலைகளை உருவாக்குவதால் தட்டான் பூச்சி இனங்கள் இனப்பெருக்கம் குறைந்து அழிகின்றன.

கிரானைட் கற்கள் தோண்டப்பட்ட பள்ளங்களில் மீன்களை வளர்த்தால் கொசுப்பெருக்கம் குறையும்.’’

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வில் ஈடுபட்ட மாணவிகளையும், ஆசிரியரையும் தலைமை ஆசிரியை டெய்சி நிர்மலா ராணி, மேலூர் தாசில்தார் ஆகியோர் பாராட்டினர்.

 


Page 309 of 3988