Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மதுரையில் ஐந்தாயிரம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம்: டிச.30-ல் விழா

Print PDF

  தினமணி       23.12.2014

மதுரையில் ஐந்தாயிரம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம்:

டிச.30-ல் விழா

மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 5,000-ம் ஏழை பெண்களுக்கு அரசு சார்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் டிசம்பர் 30-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர், மாநகராட்சி சார்பில் 4,000-ம் பேருக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 1,000-ம் பேருக்கும், ஆக மொத்தமாக 5,000-ம் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கி வாழ்த்திப் பேசுகின்றனர்.

இவ்விழாவுக்கு மேயர் விவி ராஜன்செல்லப்பா தலைமை வகிக்கிறார். மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையாளர் சி.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

விழாவில், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணை மேயர், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், மாவட்ட சமூக நலத்துறையினர் பங்கேற்கின்றனர்.

 

மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் ரூ.82 கோடியில் பாதாள சாக்கடை புனரமைப்பு

Print PDF

 தினமணி         23.12.2014

மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் ரூ.82 கோடியில் பாதாள சாக்கடை புனரமைப்பு

மதுரை மாநகராட்சியில், முந்தைய 72 வார்டு பகுதிகளில் விடுபட்ட 8 பகுதிகளில் ரூ.82.72 கோடியில் பாதாள சாக்கடை அமைத்தல் மற்றும் புனரமைப்பு பணிகளை மணிநகரம் பாதாள மாரியம்மன் கோயில் அருகில் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சியில் முந்தைய 72 வார்டு பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின் கீழ் 5 திட்டங்கள் ஒப்புதல் செய்யப்பட்டு, வைகை 2-வது குடிநீர் திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மீதமுள்ள பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளுக்கு திட்டமிட்ட சுமார் ரூ.600 கோடியையும் தாண்டி பலமடங்கு நிதி செலவிடப்பட்டும், பணிகள் முடியாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளன. இத்திட்டத்தை மேற்கொள்ள ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றாததால், அந்நிறுவனத்துக்கான வேலை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விடுபட்ட பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் புனரமைக்கும் பணி 9 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ரூ.82.72 கோடிக்கான திட்டம் புதிதாக தயாரிக்கப்பட்டு, வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக, மேயர் விவி ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இத்திட்டப்படி சந்தைப்பேட்டை, தவிட்டுச்சந்தை, பெரியார் பேருந்து நிலையம், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, தமிழ்ச்சங்கம் சாலை, தானப்பமுதலி தெரு, தைக்கால் தெரு, ஆரப்பாளையம் சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு பகுதிகளில் பாதாள சாக்கடை புனரமைத்தல் மற்றும் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்தல் பணி நடைபெறும்.

பழைய பாதாள சாக்கடை பணியில் புனரமைப்பு பணி 100 கிமீ தொலைவுக்கும், தெருக்களில் 450 கிமீ தொலைவுக்கும் இணைப்பு பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் 12 மாதங்களில் முடிக்கப்படும். இதன் மூலம் இப்பகுதிகளில் கழிவுநீர் கசிவு முற்றிலும் தடுக்கப்படும், என்றார்.

முன்னதாக நடைபெற்ற பாதாள சாக்கடை புனரமைப்பு பூமி பூஜை விழாவில், ஆணையாளர் சி.கதிரவன், சுந்தர்ராஜன், எம்எல்ஏ, உதவி ஆணையாளர் அ.தேவதாஸ், நகரப்பொறியாளர் ஆ.மதுரம், நகரமைப்பு அலுவலர் ஐ.ரெங்கநாதன், செயற்பொறியாளர்கள் அரசு, ராஜேந்திரன், உதவிப் பொறியாளர்கள் தேவராஜன், சொக்கலிங்கம், பிஆர்ஓ சித்திரவேல், வேலைக்குழுத் தலைவர் கண்ணகி பாஸ்கரன், மாமன்ற உறுப்பினர்கள் முருகேஸ்வரி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

"வரி வசூல் மையங்கள் மார்ச் 31 வரை செயல்படும்'

Print PDF

 தினமணி        22.12.2014

"வரி வசூல் மையங்கள் மார்ச் 31 வரை செயல்படும்'

கோவை மாநகராட்சியின் 2014-15ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டிற்கான சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் செலுத்துவதற்காக மார்ச் 31-ஆம் தேதி வரை வரி வசூல் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி:

"கோவை மாநகராட்சிக்கு 2014-15ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வரையிலான சொத்து வரி நிலுவைகளை கடந்த அக்டோபர் 15-க்குள் செலுத்தியிருக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள சொத்து வரி, குடிநீர்க் கட்டணத்தை உடனடியாகச் செலுத்த வேண்டும். மேலும், மாநகர எல்லைக்குள் தொழில்புரிந்து வரும் தனிநபர், வணிக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தொழில் வரி செலுத்த வேண்டும். நிலுவை வரியை 2015 மார்ச் 31-ஆம் தேதி வரை வரி வசூல் மையங்களில் செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படாமல் தவிர்க்குமாறு' அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கிழக்கு மண்டல வரி வசூல் மையங்கள்: திருச்சி சாலையில் உள்ள மண்டல அலுவலகம், வரதராஜபுரத்தில் உள்ள ஜெ.ஜெ. திருமண மண்டபம், விளாங்குறிச்சியில் உள்ள காந்தி வீதி, காளப்பட்டியில் உள்ள விளாங்குறிச்சி சாலை மையம்.

மேற்கு மண்டலம்: ஆர்.எஸ்.புரம், ராமச்சந்திரா சாலையில் உள்ள மண்டல அலுவலகம், காமராஜபுரம், சாயிபாபா காலனியில் உள்ள சிந்தாமணி நகர், பி.என்.புதூர், கவுண்டம்பாளையம் பழைய நகராட்சி அலுவலகம், வடவள்ளி பழைய பேரூராட்சி அலுவலகம், வீரகேரளத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சாலை, இடையர்பாளையம்.

மத்திய மண்டலம்: ஹூசூர் சாலையில் உள்ள மண்டல அலுவலகம், மாநகராட்சி பிரதான அலுவலகம், சுங்கம் ரவுண்டானா, டாடாபாத், ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி.

தெற்கு மண்டலம்: குனியமுத்தூரில் உள்ள மண்டல அலுவலகம், செல்வபுரம், போத்தனூர் பிரிவு அலுவலகம்.

வடக்கு மண்டலம்: மண்டல அலுவலகம், பயனீர் மில் சாலை, கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகில், கணபதி ராயப்பா நகர், ராமகிருஷ்ணாபுரம், சரவணம்பட்டி பழைய பேரூராட்சி அலுவலகம், துடியலூர் பழைய பேரூராட்சி அலுவலகம், சின்னவேடம்பட்டி பழைய பேரூராட்சி அலுவலகம்.

 


Page 33 of 3988