தினமணி 13.04.2010
“மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள் ஏப். 15 முதல் வழக்கம்போல செயல்படும்’
திருச்சி, ஏப். 12: புள்ளி விவரங்கள் தயாரிக்கும் பணியை அடுத்து, ஏப். 15-ம் தேதி முதல் வழக்கம்போல, மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள் செயல்படும் என, திருச்சி மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி மாநகராட்சியில் அனைத்து வரியினங்கள், வரியில்லா இனங்கள் வசூல் பணி மற்றும் பிறப்பு- இறப்புச் சான்று வழங்குதல் கட்டட அனுமதி, திட்ட அனுமதி ஆகிய சேவைகள் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 2009-10-ம் நிதியாண்டுக்கான பணிகள் மார்ச் 31-ம் தேதி முடிவு செய்யப்பட்டு, 2010-11-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் தயாரிக்கும் பணி ஏப். 12,13,14-ம் தேதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதைத் தொடர்ந்து, கணினி வரி வசூல் மையங்கள் வழக்கம்போல, ஏப். 15-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்‘ என்றார் பால்சாமி.