தினமணி 10.04.2013
கூடலூர் பேரூராட்சியில் “அம்மா’ திட்ட முகாம்
கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் பொதுமக்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இப்பேரூராட்சியில் கூடலூர் தெற்கு கிராமத்திற்குட்பட்ட முகாம் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்திலும், கூடலூர் வடக்கு கிராமத்திற்குட்பட்ட முகாம் திருமலைநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை கூடலூர் பேரூராட்சித் தலைவர் அ.அறிவரசு தொடங்கி வைத்தார்.இதில், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 23 பேருக்கு சாதிச் சான்றிதழ்கள், 14 பேருக்கு வருமானச் சான்றிதழ்கள், 9 பேருக்கு இருப்பிடச் சான்றிதழ்கள், 8 பேருக்கு வாரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.