தினகரன் 13.10.2010
அகில இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டி கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் அசத்தல்
கோவை, அக். 13: அகில இந்திய அளவில் மாநகராட்சிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிக ளில் கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர் பதக் கம் பெற்றனர். இவர்களை மாநகராட்சி கமிஷனர்களு க்கு நேற்று பாராட்டு விழா நடந்தது.
சென்னை மாநகராட்சி யின் 322வது ஆண்டு விழா வை முன்னிட்டு சென்னை யில் தேசிய அளவிலான மாநகராட்சிகளுக்கு இடை யிலான விளையாட்டுப் போட்டி நடந்தது. இந்தியாவில் 12 மாநகராட்சிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றிருந்தனர். கோவை மாநகராட்சி சார்பில் கவுன்சிலர் சேரலா தன், தமிழ்செல்வி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதில் கேரம் விளையாட்டில் சேர லாதன் முதலிடமும், குண்டு எறிதலில் 3ம் இடமும் பெற் றார். கவுன்சிலர் தமிழ்செல்வி குண்டு எறிதல் போட்டியில் 3வது இடமும் பெற்றனர். அகில இந்திய அளவிலான மாநகராட்சி கவுன்சிலர்களு க்கு இடையிலான போட்டி யில் கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளனர். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பாராட்டு விழாவில் கமிஷ னர் அன்சுல் மிஸ்ரா, துணை கமிஷனர் பிரபாகரன் மற்றும் உதவி கமிஷனர்கள் பங்கேற்று வெற்றி பெற்ற கவுன்சிலர்களை பாராட்டி பரிசு வழங்கினர்.