தினமணி 31.05.2013
அரியமங்கலம் பகுதியில் இன்று குடிநீர் வராது
திருச்சி பொன்மலை கூட்டுக் குடிநீர்த் திட்ட பிரதான நீரேற்றும் உந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அரியமங்கலம் பகுதிகளில் மட்டும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் குடிநீர் வராது.
சென்னை புறவழிச்சாலையில் திருவானைக்கா அருகே ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அரியமங்கலம், மேலக்கல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், செந்தண்ணீர்புரம், பொன்மலைப்பட்டி, சுப்பிரமணியபுரம், செம்பட்டு, கல்லுக்குழி, காஜாநகர், காஜாமலை ஆகிய பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
சனிக்கிழமை வழக்கம்போல குடிநீர் விநியோகம் செய்யப்படும் என ஆணையர் வே.ப. தண்டபாணி அறிவித்தார்.