தினமலர் 05.10.2010
ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம்
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு ரோடு அமைக்கும் திட்டத்தில் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் 80.18 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு பகுதிகளில் ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்க தீர்மானிக்கப்பட்டது. பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுக்கழிப்பறைகளை பொது ஏலத்தில் விட்டு வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.