தினமணி 17.08.2012
உயர்கோபுர மின்விளக்கு இயக்கி வைப்பு
வாணியம்பாடி, ஆக. 16: வாணியம்பாடி நகராட்சி சார்பில் ரூ.5.50 லட்சம் செலவில், பேருந்து நிலையப் பகுதி மற்றும் நூருல்லாபேட்டை அரசு மருத்துவமனை அருகில் இரு உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.இவற்றை வாணியம்பாடி எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் புதன்கிழமை இயக்கி வைத்தார்.
நகர்மன்றத் தலைவர் நீலோபர்கபீல், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஆம்பூரில்…
இதுபோல் ஆம்பூர் கஸ்பா-பி பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.75 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.
நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி உயர்கோபுர மின்விளக்கை இயக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், அதிமுக நகரச் செயலர் எம்.மதியழகன், நகர்மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.