ஒப்பந்த அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளுதல் புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
ஒப்பந்த அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் துப்பரவு பணி மேற்கொள்ளுவது என்று புன்செய் தோட்டக் குறிச்சி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரூராட்சி கூட்டம்
புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம், பேரூராட்சி மன்றத்தில் நடந்தது. கூட்டத் திற்கு பேரூராட்சி தலைவர் பெரியண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேந்திரன், செயல் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
திடக்கழிவு மேலாண்மை
* 20132014ம் ஆண்டிற்கு தெருவிளக்கு, குடிநீர் திட்டம், பொது சுகாதாரம், மின் மோட்டார் பழுதுபார்த்தல் மற்றும் ஆழ்குழாய் கைப்பம்புகள் பழுதுபார்த்தல், உதிரி சாமான்கள் சப்ளை செய்தல் தொடர்பான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த 27.3.2013ந் தேதி பெறப்பட்டது.
* 20132014ம் ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் துப்புரவு பணி மேற் கொள்ளவும் மற்றும் பொது சுகாதார வாகனம், டிராக்டர் இயக்கும் பணிக்கும், பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகப்பணிக்கும் ஒப்பந்தப் புள்ளி அடிப் படையில் வருடாந்திர ஒப்பந்தப்புள்ளி 27.2.2013ந் தேதி மனு பெறப்பட்டது.
தென்னை மரங்கள்
*பேரூராட்சிக்கு சொந்தமான தென்னை மரங்கள் மற்றும் பொதுப் பணித்துறையினரிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்ட தென்னை மரங்கள் 20132014ம் ஆண்டிற்கு 8.3.2013ந் தேதி பொது ஏலம் விடப்பட்டது ஆகிய தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் உறுப்பினர்கள் குரு, செல்வராணி, அருண், செல்வி, கருப்பண்ணன், ரஞ்சித்குமார், பரமேசுவரி, சீனிவாசன், செல்வராஜ், விஜயகுமார், ஜாகீர்உசேன், சரோஜா, ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.