தினமணி 26.05.2013
காரைக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
காரைக்குடி நகராட்சி சார்பில் குழாய்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் திங்கள்கிழமை (மே 27) நிறுத்தம் செய்யப்படுவதாக நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பொ. மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்குடி 2ஆவது போலீஸ் பீட் செக்காலை சாலை சந்திப்புப் பகுதியில் நகராட்சிக்கு வரும் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணி நடைபெறவிருப்பதால் மே 27 -ம் தேதி நகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.