தினமணி 22.10.2013
தாராபுரத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்
தினமணி 22.10.2013
தாராபுரத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்
தாராபுரத்தில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டடம் திங்கள்கிழமை அகற்றப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அருகே வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு உள்ளது.
95-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இக் குடியிருப்பில் மொத்தம் 44 வீடுகள்
உள்ளன.
இந் நிலையில் நகராட்சிக்குச் சொந்தமான 30 அடி சாலையை ஆக்கிரமித்து
தனியார் ஒருவர் வீடுகட்டியுள்ளதாக நகராட்சி ஆணையர் க. சரவணக்குமாருக்கு
புகார் வந்தது.
இதை தொடர்ந்து, ஆவணங்களை ஆய்வு செய்த ஆணையர், வீட்டு உரிமையாளர்
வைத்துள்ள ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சனிக்கிழமை உத்தரவிட்டிருந்தார்.
திங்கள்கிழமை காலை வரை ஆவணங்களை சமர்ப்பிக்காமல் வீட்டு உரிமையாளர்
தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இதனையடுத்து, நகராட்சி ஆணையாளர் தலைமையில் சென்ற ஊழியர்கள் கட்டுமான
பணிகளை தடுத்து நிறுத்தியதுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை
பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.
நகராட்சி இடத்தை ஆக்கிரமித்த கட்டட உரிமையாளர் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக ஆணையாளர் க. சரவணக்குமார் தெரிவித்தார்.