தினமலர் 17.03.2010
நகராட்சி பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கல்
குடியாத்தம்:குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் அனைத்து பிரிவு பணியாளர்களுக்கும் சீருடை வழங்கும் விழா நடந்தது. இதில் 175 பேருக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீருடைகள் வழங்கப்பட்டன.விழாவுக்கு நகராட்சி பொறியா ளர் உமாமகேஸ்வரி தலைமை வகித் தார். சுகாதார அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய் வாளர் பிரணாகரன் வரவேற்றார். நகராட்சி தலைவர் பாஸ்கர் சீருடைகளை வழங்கினார். கவுன்சிலர்கள் தேவராஜ், ஜெயகுமார், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.