தினமலர் 30.03.2010
பரமக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பரமக்குடி: பரமக்குடியில் மதுரை–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கிருஷ்ணா தியேட்டரில் துவங்கி மணிநகர் வரை தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. வருவாய்த்துறை சார்பில் தாசில்தார் ராஜாராமன், நகராட்சி இன்ஜினியர் ராஜேந்திரன், தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சேகர் ஆகியோர் மேற் பார்வையில் துறை பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.