போதிய இடவசதி இல்லாததால் வஉசி உயிரியல் பூங்கா இடமாற்றம்
கோவை:நேற்று நடந்த கோவை மாநகராட்சி கூட்டத்தில் வஉசி உயிரியல் பூங்கா இடமாற்றம் செய்வது உள்பட 41 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் வேலுச்சாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் 43 தீர்மானங்கள் மன்ற ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவை இடம் மாற்றுவது தொட ர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
கோவை மாநகராட்சி வஉசி உயிரியல் பூங்காவில் இடவசதி இல்லாத காரணத்தால் , அந்த பூங்காவிற்கு அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் (சிறை வளாகம் அருகில்) 25 ஏக்கர் நிலத்தில் உயிரியல் பூங்கா அமைக்க அதற்கான பரிந்துரை அரசுக்கு அனுப்பபட்டுள்ளது.
அரசு அனுமதி கிடைத்தவுடன் உயிரியல் பூங்கா அமைக்க மத்திய உயிரியல் ஆணையத்திற்கு அனுப்ப மாமன்றத்தில் ஏகமனதாக ஒப்புதல் பெறப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள ரோட்டில் கனரக வாகனங்கள், பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் இடைவிடாது செல்கின்றன.
இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள், ரயில் நிலையத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. அதை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனை அருகில் போக்குவரத்து நெரிசல் இன்றி சாலையை கடக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.72.60 லட்சம் செலவில் நடைபாதை மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இது திட்டத்தை நிறைவேற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனைத் து கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விரைவில் மேம்பாலம் கட்ட டெண்டர் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.