தினமணி 6.11.2009
மழைக்கால நோய்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை, நவ.5: எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களிலிருந்து பொதுமக்கள் தப்பிக்கலாம்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:
* குடிநீரை வடிகட்டி, கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும். *
உணவு உண்ணும் முன்பும், கழிவறைகளை பயன்படுத்திய பின்பும் கைகளை சோப்பினால் நன்கு கழுவ வேண்டும்.
* குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் தேங்கிய நீரை பம்புகளிலிருந்து அடித்தெடுத்து பருகுவதைத் தவிர்க்க வேண்டும். *
வெளி இடங்களில் மலஜலம் கழிப்பதைத் தவிர்த்து, கழிவறைகளை பயன்படுத்த வேண்டும்.
* சாலையோர ஈ மொய்த்த பண்டங்களை உண்ணக் கூடாது. *
வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உப்பு, சர்க்கரை கரைசலை அருந்தலாம். * பாதிப்பு அதிகமாக இருந்தால் அருகில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.
* மேலும் உதவிக்கு 1913, 2591 2686, 2591 2687 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.