தினமணி 20.06.2013
தினமணி 20.06.2013
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
ஆம்பூர் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு
விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலக
வளாகத்தில் புதன்கிழமை நடந்தது.
இதில் நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி தலைமை வகித்து பேசியது:
குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நாமே ஒரு காரணம். ஏனெனில் மழைநீரை
சேகரிக்காமல் விட்டுவிடுகிறோம். சாலைகள் அனைத்தும் சிமென்ட் சாலைகள், தார்
சாலைகளாக மாறியுள்ளன. மழைநீர் பூமியில் ஊராமல் கழிவுநீர்க் கால்வாயில்
சென்றுவிடுகிறது. மேலும் மக்காத பிளாஸ்டிக் கவர்களாலும் மழைநீர் பூமிக்குள்
செல்லாமல் மேற்பரப்பிலேயே தங்கி ஆவியாகிவிடுகிறது. ஆகவே நாட்டின் ஒவ்வொரு
குடிமகனுக்கும் மழைநீரை சேகரிப்பதில் பொறுப்பு, கடமை உள்ளது. ஆகவே அந்தப்
பொறுப்பை, கடமையை முழுமையாக கடைப்பிடித்து மழைநீரை சேகரித்து குடிநீர்த்
தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.
நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல்.குமார், துப்புரவு அலுவலர் பாஸ்கரன்,
ஷபீக் ஷமீல் சமூக சேவை சங்கத் தலைவர் பிர்தோஸ் கே. அஹமத், துப்புரவு
ஆய்வர்கள் சிவகுமார், பாலசந்தர், நகரமன்ற உறுப்பினர்கள் பி.கே.மாணிக்கம்,
காசிநாதன், சீனிவாசன், சரவணன், ஆகில் அஹமத், அறிவழகன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மழைநீரை சேகரிக்கும் முறை குறித்து படக்காட்சி காண்பிக்கப்பட்டது.