மாநகராட்சிக்கு ஆன்லைனில் வரி செலுத்த விரைவில் திட்டம் அமல் கமிஷனர் தீவிர ஆலோசனை
திருச்சி, : திருச்சியில் மாநகராட்சி வரி செலுத்த விரைவில் ஆன்லைன் வசதி அமல்படுத்தப்பட உள்ளது.
திருச்சி மாநகராட்சி பரப்பளவு 167.2 சதுர கிலோ மீட்டர். வார்டு எண்ணிக்கை 65. வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங் கள், தொழிற்சாலைகள் உள் ளிட்ட கட்டிடங்கள் 90,000. மக்கள்தொகை 9.5 லட்சம். இதில் மக்களுக்கான அடிப்படை வசதிகள், வளர்ச்சி திட்டங்களுக்காக மாநகராட்சி நிர்வாகம் பல் வேறு வரிகளை வசூலிக்கிறது. நடப்பு ஆண்டில் 1,82,526 பேரிடம் சொத்துவரியாக ரூ.33.6 கோடி, தொழில் வரியாக 16,994 பேரிடம் ரூ.6.13 கோடி, குடிநீருக்காக 90,655 பேரி டம் ரூ.10.5 கோடி, பாதாள சாக்கடை இணைப்புக்காக 35,110 பேரிடம் ரூ.1.18 கோடி, மாநகராட்சி கட்டிடங்கள், கடைகளின் வாட கை போன்ற இனங்கள் மூலம் 2,218 பேரிடம் ரூ.6.8 கோடி என ரூ.57.26 கோடி க்கு வரி வசூலில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக பொன்மலை, அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய 4 கோட்ட அலுவலகங்களிலும் வரி வசூல் மையம் மூலமும், நடமாடும் வாக னம் உதவியுடனும் வரி வசூல் நடக்கிறது.
பகலில் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத் தில் வரி செலு த்த முடி யாமல் அபராதம் போன்ற நடவடிக்கைகள் பாய்கின் றன. எனவே நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைனில் அனை த்து வரி செலுத்தும் திட்டத்தை அமல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக கோட்ட உதவி கமிஷனர்கள், உதவி வரு வாய் அலுவலர்கள், வங்கி அதிகாரிகளுடன் மாநகராட்சி கமிஷனர் தண்ட பாணி கடந்த 2 நாட் களாக ஆலோசனை நடத்தி வரு கிறார். இந்த திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகி றது. இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணியி டம் கேட்டதற்கு, மாமன்றம், நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி கிடைத்தவுடன் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் திட்டம் அம லுக்கு வரும் என்றார்.
செல்போன் இணைய தளம் வாயிலாக நெட் பாங் கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் வரிகளை செலுத்தலாம்.