தினமலர் 11.08.2010
விழுப்புரத்தில் நகர் ஊரமைப்புமண்டல அலுவலகம் துவக்கம்
விழுப்புரம்:விழுப்புரம் – கடலூர் மண்டலத்திற்கான நகர் ஊரமைப்பு துணை இயக் குனர் அலுவலகத்தை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.விழுப்புரம் தாட்கோ வளாகத்தில் புதியதாக அமைந்துள்ள கடலூர், விழுப்புரம் மண்டலத்திற் கான நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குனர் மணி வரவேற்றார். விழுப்புரம் நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ், எம்.எல்.ஏ., புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் பொன்முடி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நகர் ஊரமைப்பின் துணை இயக்குனர் அலுவலகம் செங்கல்பட்டில் இயங்கி வந்தது. இதனை இரண்டு மண் டலமாகப் பிரித்து விழுப் புரம், கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய மண்டல அலுவலகம் இன்று விழுப்புரத்தில் துவக்கப் பட்டுள்ளது.விழுப்புரம், திண்டிவனம், பண்ருட்டி, விருத்தாசலம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதி திட்டக் குழுமங்கள் இதன் கட் டுப்பாட்டில் இயங்கும். தற்போது விழுப்புரத்திலேயே அலுவலகம் துவக் கப்பட்டுள்ளதால் பொது மக்களுக்கு வசதியாக இருக்கும் என்றார்.விழுப்புரம் நகராட்சி கமிஷனர் சிவக்குமார், நகர ஊரமைப்பு அலுவலக மேற்பார்வையாளர் கள் சுந்தர், கோவிந்தன், மகாலட்சுமி ஸ்டோர்ஸ் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.