தினமணி 28.05.2010
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேலூர், மே 27: வேலூர் பில்டர்பெட் சாலையில் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை அகற்றினர்.
வேலூர் மாநகரின் பிரதான சாலையான பில்டர்பெட் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் செல்வராஜ், பில்டர்பெட் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அனுமதி கோரினார்.
மேயரின் அனுமதியோடு மாநகராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.