தினகரன் 02.06.2010
இறக்கை மின்விளக்கால் இருட்டு மாநகராட்சி கூட்டத்தில் புகார்
கோவை, ஜூன் 2: இறக்கை மின் கம்ப விளக்கால் ரோடு இருட்டாக இருக்கிறது. வாகனங்களை ஓட்ட முடியவில்லை என கவுன்சில் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் உலக தமிழ் செம்மொழி மாநாடு பணி தொடர்பான தீர்மானங்கள் இடம் பெற்றது. கோவை காளப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட விமான நிலைய ரோடு முதல் ஆர்.ஜி.புதூர் முருகன் கோயில் வரை தெரு மின் விளக்குகள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. இரு கைகளுடன் 96 எண்ணிக்கையில் இந்த தெரு மின் விளக்குகள் அமைக்கும் பணியை கோவை மாநகராட்சி மேற் கொள்ள மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு 75 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசு மானிய மாக 57 லட்ச ரூபாய் வழங்கியுள்ளது. மீதமுள்ள 18 லட்ச ரூபாய் காளப்பட்டி பேரூராட்சி, நமக்கு நாமே திட்டத்தில் ஈடு செய்யப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அவிநாசி ரோட்டில் கூடுதலாக 4 பஸ் ஸ்டாப் நிழற்குடை அமைத் தல், கோவை நகரில் பழைய பஸ் ஸ்டாப் நிழற்குடைகளை அகற்றி தனியார் பங்களிப்புடன் புதிய நிழற்குடை அமைத்தல், 3 ஆண்டு பராமரித்தல் பணிக்கு விருப்ப கேட்பு அறிக்கை பெறுதல் தொடர்பான தீர்மானத்திற்கு மன்ற ஒப்புதல் பெறப்பட்டது. குறிச்சி, குனியமுத்தூர், கவுண்ட ம்பாளையம் நகராட்சியில் செம்மொழி மாநாட்டிற்காக ஒரே மாதிரியான பஸ் ஸ்டாப் நிழற்குடை அமைக்கப்படும். தனியார் பங்களிப்புடன் 3 ஆண்டு பராமரிக்க, விளம்பரம் செய்ய விருப்ப கேட்பு அறிக்கைக்கு மறு அழைப்பு கோரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. நவ இந்தியா ரோட்டில் இடை யூறாக உள்ள எம்.ஜி.ஆர் சத்துணவு மையத்தை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
மின் விளக்கு தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயகுமார் பேசுகையில், ‘’ அவிநாசி ரோட்டில் இறக்கை மின் விளக்குகளில் போதிய வெளிச்சம் இல்லை. இரவில், மின் விளக்கு வெளிச்சத்தை நம்பி வாகனத்தில் செல்ல முடியாது. எப்படி இதுபோன்ற முறையில் மின் விளக்கு வடிவமைக்கப்பட்டது. இதனால் எந்த பயனும் கிடையாது. ரோடு இருட்டாக இருக்கிறது, ” என்றார். சுயேட்சை கவுன்சிலர் வேல்முருகன் பேசுகை யில், ” மின் தடை செய்து மின்சாரத்தை மாநகராட்சி சேமிக்கிறது. தொழில்நுட்ப ரீதியில் மின் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தவில்லை, ” என்றார். கவுன்சிலர்கள் சிலர் இறக்கை மின் விளக்கு, மிக குறைவான வெளிச்சம் தரு கிறது என புகார் கூறினர்.
மேற்பார்வை பொறி யாளர் பூபதி கூறுகை யில், ” அவிநாசி ரோட்டில் 6 வழிபாதை முழுமையாக தெரியும் வகையில் இறக்கை வடிவிலான மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ரோடு, வாகனங்களுக்கு முழு அளவில் வெளிச்சம் தெரியும். அருகேயுள்ள கட்டடம், இதர பகுதிக்கு வெளிச்சம் போகாது. கடந்த காலங்களில், ரோட்டிற்கு வெளியே வெளிச்சம் காணப்பட்டது. வெளியே வெளிச்சம் தெரியாமல் இருப்பதால் தோற்றத்திற்கு அப்படியிருக்கலாம், ” என்றார்.
ஒருங்கிணைந்த சத்துணவு கூடத்தில் அடிப் படை வசதியில்லை. மாநகராட்சி பள்ளி கட்டடத்தில் கூடுதல் வகுப்பறைக்கு சத்துணவு மையத்தை சேர்க்கவேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். மாநகராட்சி மன்ற கூட்டத்திற்கு தீர்மானங் களை கொண்டு வராமல் பணிக்குழு மூலம் தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிக்குழுவிற்கு அதிகாரம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.