தினமலர் 04.032010
குடிநீர் வரி செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு: செயல் அலுவலர் எச்சரிக்கை
முசிறி: முசிறியில் குடிநீர் வரி கட்டாதவர்களின் வீடுகளில் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முசிறி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 2009-10ம் ஆண்டிற்குரிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரியை ஆகியவற்றை 1 முதல் 18 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மறு இணைப்பு 6 மாதத்திற்கு வழங்கப்படமாட்டாது. மேலும் முசிறி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் பேரூராட்சி அலுவலகத்தில் உடனடியாக செலுத்தி முறையாக ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.