தினமலர் 12.08.2010
சீருடையுடன் பணியாற்ற வேண்டும்: மேயர்
சென்னை : மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் வருகையை, மேயர் சுப்ரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.சென்னை மேயர் சுப்ரமணியன், நேற்று காலை 6.30 மணியளவில் திடீரென்று, நுங்கம்பாக்கம், மண்டல அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பணிக்கு வரும், துப்புரவு தொழிலாளர்கள், பயோ மெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்வதை பார்வையிட்டார்.துப்புரவு தொழிலாளர்கள் கட்டாயம், தினந்தோறும் சீருடையுடன் தான் பணிபுரிய வேண்டும் என்று மேயர் துப்புரவு தொழிலாளர்களிடம் அறிவுறுத்தினார். முன்னதாக மேயர் நுங்கம்பாக்கம் சுதந்திர தின பூங்கா மற்றும் வள்ளூவர் கோட்டம் எதிரில் உள்ள பூங்காக்களுக்கு சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.