தினமலர் 24.03.2010
நாய்களுக்கு விரைவில் குடும்ப கட்டுப்பாடுநகராட்சி கூட்டத்தில் முடிவு
ஜெயங்கொண்டம் : நாய்களுக்கு விரைவில் குடும்ப கட்டுப்பாடு செய்வது என ஜெயங்கொண்டம் நகராட்சி முடிவு செய்துள்ளது.ஜெயங்கொண்டத்தில் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் லதா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் உள்ள நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாய்களுக்கு விரைவில் குடும்ப கட்டுப்பாடு செய்வது, தெரு ஓரங்களில் கடை வைத்துள்ளவர்களின் நலன் கருதி அவர்களை குழுவாக அமைத்து அவர்களுக்குஅடையாள அட்டைகள் வழங்குவது,நவீனஆட்டு இறைச்சி கூடத்தில் ஆட்டை டாக்டர் பரிசோதித்து அனுமதி பெற்ற பிறகே ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் ஆட்டை அறுக்க வேண்டும். துரு இல்லாத கத்தியை பயன்படுத்தி ஆட்டைஅறுக்க வேண்டும். அறுத்த ஆடுகளை சில்வர் கொக்கியில் தொங்க விட வேண்டும் என்பது உட்பட 21 விதிகளை ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் பின்பற்ற வேண்டும். ஜெயங்கொண்டம் நகராட்சியை 2ம் நிலை நகராட்சியாக அரசு தரம் உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கவுன்சிலர்கள் அப்பர், இளங்கோவன், திருஞானம், சுரேஷ், வக்கீல் ஜெயராமன், தலைமை எழுத்தர் பாலமுருகன், துப்புரறவுஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளநிலை உதவியாளர் ரத்தினம் நன்றி கூறினார்.