தினமலர் 18.05.2010
பஸ்ஸ்டாண்ட் திட்டத்திற்கு நிதி ஒதுக்க தடை இல்லை
தேனி : தேனியில் பாதாள சாக் கடை திட்டம், புதிய பஸ் ஸ்டாண்ட் திட்டத்திற்கு நிதி வழங்க தடை இல்லை என ஆய்வுக்கு பின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் பாதாள சாக் கடை திட்டம் 38.66 கோடி ரூபாயிலும், புதிய பஸ் ஸ்டாண்ட் 16 கோடியிலும் அமைய உள்ளன. இதற் கான தொகை தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சி நிதி உதவி கழகம் மூலம் பெறப்பட உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், நிதி உதவி கழக ஆலோசகர் மாதவன், துணை மேலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
பாதாளசாக்கடை கழிவு நீரேற்று நிலையங்கள் அமைய உள்ள இடம், சுத் திகரிப்பு நிலைய இடம், புதிய பஸ் ஸ்டாண்ட் இடங்களை பார்வையிட்ட பின் கூறுகையில், ‘குறைகள் எதுவும் இல்லை. நிதி வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை, விரைவில் நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும்‘ என்றனர்.