தினமலர் 17.04.2010
பொள்ளாச்சி மார்கெட்டில் கூடுதலாக சுங்க வரி வசூல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி காய்கறி மார்க்கெட் மற்றும் மாட்டுசந்தை நுழைவாயிலில் நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தை விட கூடுதலாக சுங்க வரி வசூலிப்பதை த டுக் காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கொ.மு.க., அறிவித்துள்ளது. கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில், பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் வரதராஜிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாது: பொள்ளாச்சி தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் மாட்டு வண்டி, மொபட், பைக், ஆட்டோ, மினிலாரி, டெம்போ, லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் விளைபொருட்களை எடுத்து வருகின்றனர். காய்கறி மார்க்கெட் நுழை வாயிலில் நிர்ணயிக்கப்பட்ட சுங்க வரியை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பது பற்றி 2009, மே மாதம் நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுத்து நுழைவு கட்டணம் கூடுதலாக வசூலிப்பதை தடுக்கவில்லை. சந்தை நுழைவாயிலில் நிர்ணயிக்கப்பட்ட சுங்கவரியை மட்டும் வசூலிக்க வேண்டும். சுங்கவரி கட்டணம் பற்றி நிரந்தரமாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பணம் செலுத்துவதற்கு முறையாக ரசீது வழங்க வேண்டும். அதேபோன்று மாட்டுச்சந்தையிலும் நுழைவுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட அளவு வசூலிக்கவும், நிரந்தர அறிவிப்பு பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னைகள் ஏப்., 19ம் தேதிக்குள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, முடிவுகளை அறிவிக்க வேண்டும். எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால் ஏப்., 29ம் தேதி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
கொங்குநாடு முன்னேற்ற கழக மாநில விவசாய அணி அமைப் பாளர் சுப்பிரமணியம், மாவட்ட அமைப்பாளர்கள் நித்தியானந்தம், காளிமுத்து, கோபால் சாமி, பூபதி, மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய அமைப்பாளர்கள் ஜெயராமச்சந்திரன், கண்ணுசாமி, பகவதி, நகராட்சி கவுன்சிலர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி கமிஷனர் கூறுகையில், ‘சுங்க கட்டணம் வசூலிக் கும் உரிமத்தை ஏலம் எடுத்துள்ளவர்களிடம் விசாரணை செய்யப்படும். அதிக கட்டணம் வசூலித் தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்‘ என்றார