தினகரன் 27.05.2010
ஆக்கிரமிப்பு அகற்றம் 3 நாட்கள் தொடரும்:கலெக்டர் அறிவிப்பு
தஞ்சாவூர்: தஞ்சையில் ஆக்ரமிப்புக்கள் அகற்றப்பட்டது. தஞ்சை நகரில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான ரோடுகளில் இருந்து ஆக்ரமிப்புக்கள் அகற்றப்பட்டன. கடந்த மூன்று நாட்களுக்கு முன் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் தஞ்சை நகரப்பகுதியில் உள்ள நகராட்சி ரோடுகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளில் உள்ள ஆக்ரமிப்புக்களை கடைக்காரர்கள் மற்றும் வீடு கட்டி உள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும், என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.