மாநகராட்சியில் 8 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை
திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய ஆய்வில், கடைகள் மற்றும் கிடங்குகளில் இருந்து, 8 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பை, டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை விற்பனை செய்த கடை உரிமையாளர்களிடம் ரூ.23 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கை கடுமையாக இல்லாமல், பெயரளவில் உள்ளதால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பகிரங்கமாக விற்கப்படுகின்றன. இதனால் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் டம்ளர் விற்பனை அதிகமாக உள்ளது. இப்பொருட்கள் நகரில் உள்ள சாக்கடைகளை அடைத்துக் கொள்வதால், கழிவுநீர் செல்ல தடையாக உள்ளது. இவற்றை அகற்ற முடியாமல், மாநகராட்சி நிர்வாகம் திணறுவதால், நகரின் சுகாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இதில் 8 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பை, டம்ளர்களை பறிமுதல் செய்தனர். மேலும் 16 கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.23 ஆயிரத்து 50 அபராதமாக வசூலிக்கப்பட்டது.