தினத்தந்தி 04.08.2021
சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா நோய்த்தொற்று
பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக
நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி
போடப்பட்டு வருகிறது.
பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக
நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி
போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்
சென்னையில் நீண்ட நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே பொதுமக்களுக்கு
அதிகளவில் அளிக்கப்பட்டு வந்து நிலையில், மீண்டும் கோவிஷீல்டு
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
சென்னையில் நீண்ட நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே பொதுமக்களுக்கு
அதிகளவில் அளிக்கப்பட்டு வந்து நிலையில், மீண்டும் கோவிஷீல்டு
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று எந்த மையங்களிலும்
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று எந்த மையங்களிலும்
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
கோவாக்சின் தடுப்பூசியை பொறுத்தவரை ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 150
பேருக்கும், நேரடியாக வருபவர்கள் 250பேருக்கும் தடுப்பூசி போடப்படும் என
மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியை பொறுத்தவரை ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 150
பேருக்கும், நேரடியாக வருபவர்கள் 250பேருக்கும் தடுப்பூசி போடப்படும் என
மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.