தினமலர் 28.11.2017
பாதாள சாக்கடை இணைப்பு, ‘கட்’
குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சியில், பல ஆண்டுகளாக, பாதாள சாக்கடை
இணைப்புக்கு, கட்டணம் செலுத்தாத, 10 அடுக்குமாடி குடியிருப்புகளின் இணைப்பை
நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.
பல்லாவரம் நகராட்சியில், 75.33
கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இங்கு
இதுவரை, 22 ஆயிரத்து 520 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
குடியிருப்புகளுக்கு வைப்பு தொகை, 10 ஆயிரம் ரூபாய் என்றும்,மாத கட்டணம்
150 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விடுபட்ட பகுதிகளில், 24.06
கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இந்நிலையில்,
பாதாள சாக்கடை திட்ட கட்டணம் செலுத்தாத குடியிருப்புகள் குறித்து,
கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், 10 அடுக்குமாடி
குடியிருப்புகள், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, கட்டணம் செலுத்தவில்லை என்பது
தெரியவந்தது.அந்த இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.