தினமலர் 05.08.2021
வரி பாக்கி ; வேலூர் மாநகராட்சி நோட்டீஸ்
வேலுார்
மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இங்கு
தொழில் வரி, சொத்து வரி, மாநகராட்சிக்கு சொந்தமான 3,000 கடைகள் வாடகை என
ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் வரை வருவாய் வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த
இரண்டு ஆண்டுகளாக சரியாக வரி வசூல் ஆகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்
வேலூர் மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் வரி வசூல் ஆகாமல் உள்ளது.
இது
குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது; கொரோனா பரவலை காரணம் காட்டி
நிறைய பேர் வரி பாக்கி வைத்துள்ளனர். இதனால் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வரி பாக்கி வைத்தவர்களின் விவரங்களை
சேகரித்து வரி பாக்கியை 15 நாட்களில் செலுத்தும்படி அவர்களுக்கு
இன்று(ஆக-5) முதல் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள்
கூறினர்.