தினமணி        17.04.2013
                            
                        
	                    அனுமதி பெறாத இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை
கோவையில் உரிய அனுமதி பெறாமல் செயல்படும் இறைச்சிக் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் க.லதா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ஆணையாளர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் உரிய அனுமதி பெறாத இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் இருந்து இறைச்சிக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதுடன் சுகாதாரக் கேடுகளும் ஏற்படுகின்றன.
அனுமதி பெறாமலும் மாநகராட்சியின் உரிமம் பெறாமலும் செயல்படும் இறைச்சிக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதிப்பதுடன் இறைச்சியும் பறிமுதல் செய்யப்படும். கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
