வீதிகளில் புதிய பெயர்ப்பலகை: திண்டிவனம் மக்கள் வரவேற்பு
திண்டிவனம் நகராட்சி சார்பில், நகரின் முக்கிய வீதிகளில் புதிய பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் வரவேற்றுள்ளனர்.
திண்டிவனம் நகரில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அதேபோல் நகரில் முக்கிய வீதியான நேரு வீதி, காலேஜ் ரோடு, செஞ்சி ரோடு என பல வீதிகள் உள்ளன.
இதற்கு முன் நடந்த திமுக ஆட்சி காலத்தில் நடந்த திண்டிவனம் நகராட்சி நிர்வாகம் நகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் செங்கல்லினால் பெயர் பலகைகள் வைக்கப்பட்டன.
ஆனால் அவை அனைத்தும் சுமார் 1 வருடம் கூட முழுமையாக மக்களுக்கு பயன் அளிக்க முடியாமல் இடிந்து விழுந்தும், பெயிண்டால் எழுதப்பட்ட வரிகள் அழிந்தன.
தற்போது செயல்பட்டும் வரும் நகராட்சி நிர்வாகம் நகரின் 30 முக்கிய இடங்களில் 5 லட்சம் மதிப்பில் ஸ்டில் பைப்பிலான ஒளியை பிரதிபலிக்கும் புதிய பெயர்ப் பலகைகளை வைத்துள்ளது.
நீண்டகாலம் அழியாமலும் துருப்பிடிக்காமலும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட இப்பெயர் பலகைகள், நகர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து நகர்மன்றத் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் கூறுகையில், நகர எல்லையின் நான்கு திசைகளிலும், 33 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் இதே போன்ற பெயர்ப்பலகைகள் ரூ.9 லட்சம் செலவில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.